Raja Rani 2 Today Episode | 25.04.2022 | Vijaytv
Raja Rani 2. 25.04.2022
ராஜா ராணி 2 தொடரில் இன்று, அர்ச்சனா தனக்கு ஆண் குழந்தை பிறப்பது முக்கியம் தான் ஆனால் அதை விட சந்தியாவுக்கு குழந்தை பிறக்கவே கூடாது என்று நினைத்தார். உடனே அந்த சாமியாரை பார்க்க கிளம்பினார். அங்கு சென்று என் தோழிக்கு இப்போது குழந்தை பெற விருப்பம் இல்லையாம் என்று பொய் சொல்லி வேறு மருந்து கேட்டார். அந்த சாமியாரும் அதற்கு பணம் வேண்டும் என்று கேட்டார். அதற்கு தன் கையில் பணம் இல்லை ஆனால் இந்த வளையலை வைத்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். அவரது தங்க வளையலை எடுத்து கொடுத்தார். அந்த சாமியாரும் எதோ ஒரு மருந்தை தூக்கி கொடுத்தார். அதையும் நம்பி அர்ச்சனா வாங்கி சென்றார். அன்று இரவு சரவணன் சந்தியா இருவருக்கும் மயில் பால் ஆத்திக்கொண்டு இருந்தார். உடனே மயிலுக்கு வேறு வேலை கொடுத்து அனுப்பி விட்டு அந்த பாலில் அந்த மருந்தை கலந்தார் அர்ச்சனா. ஆனால் அதை சரவணன் சந்தியாவுக்கு கொடுப்பதற்குள் ரவி அதை வேகமாக வாங்கி குடித்தார். அர்ச்சனா அதை பார்த்து எரிச்சல் அடைந்தார். அடுத்த நாள் ரவிக்கு எந்த பிரச்சனையும் இல்லாததால் இந்த மருந்து போலி என்று நினைத்தார். உடனே அந்த சாமியாரை பார்க்க கிளம்பினார். அங்கு சென்று என்ன செய்தார்? அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…
About Author
Auto Amazon Links: No products found.