ராஜா ராணி 2 தொடரில் இன்று, ஜெஸ்ஸி தன் கர்பத்துக்கு ஆதி தன காரணம் என்று கூறினார். ஆனால் ஆதி அமைதியாகவே இருந்தார். இதனால் அனைவரும் ஜெஸ்ஸியை தவறாகவே பார்த்தார்கள். மேலும் ஆதியை வாயை திறந்து என்ன நடந்தது, எது உண்மை என்று சரஸ்வன் மற்றும் செந்தில் இருவருமே கேட்டார்கள். அதன் பின் ஆதி தன்னை காப்பாற்றிக்கொள்ள நினைத்து ஜெஸ்ஸியை இரண்டு முறை தான் பழக்கம் என்றும் அதற்கு மேல் எந்த தொடர்பும் இல்லை என்றும் பொய் சொன்னார். இதை கேட்ட ஜெஸ்ஸி அதிர்ச்சியில் உறைந்தார். அதை ஜெஸ்ஸியால் ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. மேலும் ஆதியிடம் சரவணன் அடுத்து அவரை உண்மையை சொல்லும்படி கூறினார். ஆனால் அதற்கும் பொய் சொல்லி தப்பித்தார் ஆதி. மேலும் இவர்கள் பலகியதற்கான எந்த ஆதாரமும் இருவர் இடமும் இல்லை என்பதால் ஜெஸ்ஸி சொல்வதை யாருமே நம்பமுடியவில்லை. மேலும் சிவகாமி என் பையன் எந்த தவறும் செய்யவில்லை முதலில் வீட்டை விட்டு கிளம்பு என்று திட்டினார். பின் ஜெஸ்ஸியின் பெட்ரோருக்கு அழைத்து வர வைத்தார்கள். அவர்களும் வந்து விசாரித்தார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…