Raja Rani 2 Today Episode | 26.01.2022 | Vijaytv

Raja Rani 2.26.01.2022

Raja Rani 2.26.01.2022

ராஜா ராணி தொடரில் இன்று, வீட்டில் யாரை பற்றியும் கவலை படாத ஆதி,தான் எடுத்த பணத்தை வைத்து என்ன எல்லாம் செய்யலாம் என்று கனவு கண்டார். தன் அறைக்குள் ஆட்டம் பாட்டம் என்று துள்ளி குதித்து கொண்டாடினார். யாரும் தன்னை சந்தேக படவில்லை என்று நிம்மதியாக இருந்தார். இந்த பணத்தை வைத்து புது வண்டியோ, உது மொபைல் அல்லது புது வாட்ச் என்று கனவு கண்டார் ஆதி. அடுத்த நாள் காலையில் யாருமே பணத்தை வைக்கவில்லை என்று சிவகாமி மனம் நொந்து போனார். இந்த வீட்டில் யாரோ ஒருவர் பணத்துக்காக சொந்த வீட்டில் திருடி உள்ளார்கள் என்று நொந்துகொண்டார். பின் ஆதி வேலைக்கு செல்வதாக கிளம்பினார். பார்வதியும் பரிட்சை எழுத போவதாக கிளம்பினார். மற்றவர்களும் அவர்கள் வேலையை செய்ய கிளம்பினார்கள். சந்தியாவிடம் சிவகாமி நடந்ததை சொல்லி புலம்பினார். சந்தியா இந்த திருட்டு யார் செய்தார் என்பதை கண்டு பிடிக்க போலீஸ் மட்டுமே உதவ முடியும் என்று கூறினார். ஆனால் சிவகாமி மீண்டும் இந்த வீட்டுக்குள் போலீஸ் எனும் வார்த்தையே சொல்ல வேண்டாம் என்று கூறினார். அர்ச்சனா டீ குடிக்கும்போது உமட்டிக்கொண்டு வந்தது. வாந்தியும் எடுத்தார். அவருக்கு தான் கர்பமாக இருப்பதாக உணர்ந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்தார். தனக்கு இப்போதைக்கு இந்த குழந்தை தேவை இல்லை என்று நினைத்தார்.அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author