ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா இந்த கொரில்லா தாக்குதலில் தானும் பங்கு பெற வேண்டும் என்று கூறினார். ஆனால் அதை அந்த போலீஸ்காரர்கள் அனுமதிக்கவில்லை. இதனால் அவர்களுக்கே தெரியாமல் சந்தியா தனக்கு தேவையான பொருட்கள், துப்பாக்கி என்று அனைத்தையும் எடுத்துக்கொண்டு கிளம்பினார். அவர் கிளம்புவதை பார்த்த அப்துல் மற்றும் சேட்டா இருவரும் தாங்களும் இதற்கு உதவி செய்கிறோம் என்று கூறினார்கள். ஆனால் சந்தியா இதனால் உங்கள் வேலைக்கு கூட ஆபத்து வரலாம், அதனால் இதை நான் தனியாகவே மோதி பார்க்கிறேன் என்று கூறி கிளம்பினார். பின் போகும் வழியில் காட்டில் வசிக்கும் கிராம வாசிகளை பார்த்தார் சந்தியா. அவர்களிடம் இந்த சமூக விரோதிகளை பற்றி விசாரித்தார். அவர்களால் நடக்கும் விபரீதங்களையும் கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….