ராஜா ராணி தொடரில் இன்று, சந்தியா தன் அண்ணிக்கு நல்லபடியாக குழந்தை பிறக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டினார். சிவகாமி காணாமல் போன பணத்தை நினைத்து அழுது புலம்பினார். ரவி என்ன என்னவோ சமாதானம் செய்தும் அவர் சமாதானம் ஆகவில்லை. தான் வளர்த்த வளர்ப்பு சரி இல்லையோ என்று புலம்பினார். உடனே கோவிலுக்கு போய் வரலாம் என்று ரவி கூறினார். சிவகாமி சந்தியாவையும் அழைத்து கோவிலுக்கு கிளம்பினார்கள். அங்கு பக்கத்து தெருவில் இருக்குமாறு பெண் அழுது கொண்டே சென்றார். என்ன நடந்தது என்று சிவகாமி விசாரிக்க, அவரும் தன் கஷ்டத்தை கூறினார். தனக்கு ஒரே மகன் அவன் படிக்கவில்லலை அதனால் படித்த மருமகளாக பார்த்தேன். வேலைக்கும் சென்றாள். போக போக வீட்டில் யாரையுமே மதிக்கவில்லை என்று புலம்பினார். இதை கேட்ட சிவகாமி இதனால் தான் நான் என் மருமகளை வேலைக்கு அனுப்ப மாட்டேன் என்று கூறினார். இதை கேட்டதும் சரவணன் இடம் தன் கனவை பற்றி பேச நினைத்த சந்தியா மீண்டும் பேச வேண்டாம் என்று முடிவு செய்தார்.அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…