Raja Rani 2 Today Episode | 28.01.2022 | Vijaytv

Raja Rani 2.28.01.2022

Raja Rani 2.28.01.2022

ராஜா ராணி தொடரில் இன்று,சிவகாமி தன் வீட்டில் காணாமல் போன பணத்தை யாரும் திரும்ப வைக்கவே இல்லையே! அதை அப்படியே எப்படி விட முடியும்? 5 லட்சம் என் புள்ளை படாத கஷ்டம் எல்லாம் பட்டு வாங்கிய பணம் என்று புலம்பினார். ரவி மற்றும் சந்தியா இருவரும் எப்படியும் பணத்தை எடுத்தவர்கள் செலவு செய்யும்போது தானாக உண்மை வெளியில் வரும், அதுவரை பொறுமையாக இருக்கலாம் என்று கூறினார்கள். சரவணன் கடையில் ஒரு சின்ன வேலை இருக்கு, அதனால் சந்தியாவை கடைக்கு அழைத்துச் சென்றார். அந்த நேரம் அர்ச்சனா மற்றும் செந்தில் இருவரும் வீட்டை விட்டு வெளியே செல்ல ஒரு திட்டம் போட்டு வந்தார்கள். அர்ச்சனாவின் அம்மாவுக்கு நெஞ்சு வலி என்று கூறி அர்ச்சனா அழுது ஆர்ப்பாட்டம் செய்தார். இதனால் அதை உண்மை என நம்பிய சிவகாமி பதட்டம் அடைந்தார். செந்திலும் சேர்ந்து பொய் சொல்லி கிளம்பினார். சிவகாமி தானும்வருவதாக கிளம்பினார். ஆனால் அதை சமாளித்து வர வேண்டாம் என்று கூறி இருவர் மட்டுமே கிளம்பினார்கள். பின் ஒரு ஆட்டோ பிடித்து ஒரு கம்மி பட்ஜெட் லாட்ஜ்க்கு சென்றார்கள். அங்கு அனைவருமே அர்ச்சனாவை வேறு விதமாக பார்த்தார்கள். அடுத்து என்ன நடந்தது? சந்தியவுக்கு தெரிய வந்தது? காணொளியை பார்க்க…

About Author