Raja Rani 2 Today Episode | 28.03.2022 | Vijaytv

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா தன் லட்சியத்தை சரவணன் எடுக்கும் முயற்சிக்காக கண்டிப்பாக நிறைவேற்றுவேன் என்று கூறினார். சந்தியா தான் ஐ.பி.எஸ் படிப்பை ஆரம்பிப்பதாக கூறினார். சரவணன் அளவில்லா சந்தோசம் கொண்டார். தான் பட்ட கஷ்டங்கள் வீண் போகவில்லை என்று நினைத்தார். சந்தியாவை பாராட்டி ஊக்குவித்தார். அன்று இரவு அவரை படிக்கவும் வைத்தார். பின் இனி இந்த படிப்பு பத்தாது, தனியாக கோச்சிங் செல்ல வேண்டும் சந்தியா கூறினார். உடனே சரவணன் இங்கு செல்லவும் நான் உதவி செய்வேன் என்று கூறினார். அடுத்த நாள் சிவகாமி ஒரு தையல் இயந்திரம் வாங்கி வந்தார். அது சந்தியாவுக்காக என்று கூறினார். வீட்டு வேலை வர வில்லை அதனால் தையல் பழகிக்கொள்வாள் என்று கூறினார். ஆனால் இது சாந்தியாவுக்கு விருப்பம் இல்லை. அவர் முகத்தை பார்த்து வீட்டில் அனைவருமே அதை புரிந்து கொண்டார்கள். ஆனால் சிவகாமி அதெல்லாம் சந்தியா கற்றுக்கொள்வாள் என்று கூறினார். சந்தியா வேறு வலி இன்று அதற்கு ஒத்துகொண்டார். பின் அவர் நிலையை நினைத்து நினைத்து அழுதார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author