ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் தனக்கு எழுதி கொடுத்த கடிதத்திற்கு பதில் கடிதம் எழுதி அதை சக்கரையிடம் கொடுத்து விட்டார் சந்தியா. அதை அர்ச்சனா சிவகாமி முன் அந்த டப்பாவ்வை உடைத்தார். பின் அதில் என்ன எழுதி இருந்தார் எனவும் படித்தும் காட்டினார். அதில் சரவணன் சந்தியாவிடம் மன்னிப்பு கேட்டு இருந்தார். பின் சந்தியா அவரை சமயல் போட்டியில் கலந்து கொள்ள வற்புறுத்தி இருந்தார். இதை கேட்ட சிவகாமி தன் மகனின் விருப்பம் இல்லாமல் அவனை எதற்கு கட்டாய படுத்துகிராள் என்று திட்டினார். எந்த தப்பும் செய்யாத சரவணன் எதற்கு இவளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் திட்டினார். பின் சிவகாமியை இந்த போட்டிக்கு சம்மதிக்க வைக்க ரவியிடம் உதவி கேட்கிறார் சந்தியா. அவரும் அதை கேட்டதும் உதவுவதாக கூறினார். அர்ச்சனாவின் தங்கையைப் பெண் கேட்டு ஒரு பெண் வீட்டிற்க்கு வந்தார். பெண் வீட்டார் எப்படிபட்டவர்கள் என்று தெரிந்து கொள்ள வந்து இருந்தார். சிவகாமி அந்த பிரியா மிகவும் நல்ல பெண் எனவும், குடும்பத்திற்கு ஏத்த பெண் என்றும் கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…