Raja Rani 2 Today Episode | 30.08.2022 | Vijaytv

Raja Rani 2. 30.08.2022

Raja Rani 2. 30.08.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, ஜெஸ்ஸி மற்றும் ஆதி இருவரும் சந்தித்து பேசினார்கள். ஆதி செய்தது பெரிய தவறு என்று ஜெஸ்ஸி தன் பக்க நியாயத்தை கூறினார். ஆனால் ஆதி உன் கர்பத்தை அழைத்து விட்டு வேறு வேலையை பார் என்று கூறினார். ஜெஸ்ஸி விடாமல் அவரை கேள்வி கேட்டார். தன்னை ஏமாற்றுவதாக கூறினார். நீ இதி எல்லாம் திட்டம் போட்டு தான் செய்து இருக்க வேண்டும் என்று கூறினார். அதே போல் ஆதியும் திமிராக என்ன செய்ய முடியுமோ செய்து கொள்ளும்படி கூறினார். இதனால் கோவத்தில் ஜெஸ்ஸி அவரது அப்பாவுக்கு அழைத்து உடனே போலீசில் புகார் கொடுக்க கிளம்பினார். ஆனால் அதே நேரம் சந்தியாவிடம் புகார் கொடுக்க போவதாக தகவல் கூறினார். இதை கேட்டதும் சந்தியா பதட்டமாக கிளம்பினார். இதை கவனித்த சரவணன் அவர் பின் தொடர்ந்தார். போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்க முன் வந்த போது சந்தியா அதை தடுத்து நிறுத்தினார். இப்படி செய்தால் இரண்டு குடும்பங்களையும் சேர்க்கவே முடியாது, adhanaalvporumaiyaga இதை கை ஆளலாம் என்று கூறினார். இதை கேட்டு ஜெஸ்ஸியும் புகார் கொடுக்க வேண்டாம் என்று முடிவு எடுத்தார். இந்த நிலையில் சிவகாமியின் மாமியார் ஆதிக்கு திருமணம் செய்யாததால் தன இந்த மாதிரி பெண்கள் கிளம்புவதாக கூறினார். அதனால் நாளைக்கே ஆதிக்கு ஒரு நல்ல இடத்தில் பெண் பார்க்க போகலாம் என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

About Author