Raja Rani 2 Today Episode | 30.11.2022 | Vijaytv
Raja Rani 2. 30.11.2022
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா பயிற்சியில் தான் தண்ணீர் இரைக்கிரேன் என்று கூறினார். ஆனால் அப்துல் அதற்கு சம்மதிக்கவில்லை. அவரே தான் அந்த வேலையை செய்தார். ஆனால் மற்றவர்கள் செய்ததை விட அதிகமாக தண்ணீர் இரைக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தார்கள். பின் சற்று நேரத்தில் அப்துல் கைகள் அறுத்து தண்ணீர் இரைக்கவே கஷ்டப்பட்டு செய்தார். இதை கவனித்த சந்தியா தான் செய்வதாக கூறினார். ஆனால் அப்துல் ஒத்துக்கொள்ளவில்லை. இதனால் சந்தியா அந்த தொட்டிக்குள் இறங்கி தண்ணீரை இறைக்க முழு உதவியும் செய்தார். இதனால் மேலும் அதிகமாக தண்ணீர் இறைக்க முடிந்தது. கடைசியில் அப்துல் குழுவே 555 லிட்டர் தண்ணீர் இறைத்து முதல் இடத்தை பிடித்தார்கள். இவர்களில் ஒருவருக்கு சிறந்த போட்டியாளர் என்ற ஒரு பரிசும் வழங்கப்படும் என்று கூறினார். அதை யார் வாங்கப் போகிறார் என்று அனைவரும் ஆவலோடு இருந்தார்கள். கடைசியில் கௌரி அந்த பரிசை சந்தியாவுக்கு கொடுத்தார். ஆரம்பத்தில் இருந்தே சந்தியாவின் நடவடிக்கைகள் என்னை ஈர்த்து வருகிறது என்று கூறினார். மேலும் இப்போது அவர் ஒவ்வொரு போட்டியிலும் நல்ல மதிப்பெண்ணும் எடுத்து வருகிறார் என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….
About Author
Auto Amazon Links: No products found.