Raja Rani 2 Today Episode Review | 11.10.2021 | Vijaytv

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணனை சந்தியா வண்டியில் ஏறி ஊரை சுற்றி காட்டி பின் வீடு வந்து சேர்ந்தனர். சிவகாமி வரும்வரை காத்திருந்து பின் எலுமிச்சை பூ பொட்டு எல்லாம் வைத்து மாலை போட்டு வண்டியை பார்த்து ரசித்தனர். ஆனால் இதை பார்த்து அர்ச்சனா பொறாமை படுகிறார். ஆதி நக்கல் நையாண்டி செய்கிறார். சரவணனுக்கு வண்டி ஓட்ட தெரியாது என ஏளனம் செய்தனர். ஆனால் சந்தியா அவர் ஒட்டுவார் என பெருமையாக கூறினார். பார்வதியை அழைத்து சென்று ஒரு நகை கடையில் மோதிரம் ஒன்று வாங்கி பரிசளித்தார் பாஸ்கர். பார்வதியும் அதை ஏற்றுக்கொண்டார். பின் வீட்டிற்கு போகும் வழியில் விக்கியை சந்திக்கிறார். இந்த மோதிரம் தான் குடுத்த பணத்தில் வாங்கியதாகவும், பாஸ்கரின் பண பிரச்சனையை சரி செய்ததும் தான்தான் எனவும் கூறினார். பின் வீட்டில் அனைவரும் தூங்கிய பின் சரவணனுக்கு வண்டியில் எது எங்கே இருக்கிறது என்று கற்றுக்கொடுத்தார் சந்தியா. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author