Siragadikka Aasai today episode – 21st May 2024 Review | Vijay Television

Siragadikka Aasai Muthu Meena Romance PC Hotstar.jpg

Siragadikka Aasai Muthu Meena Romance PC Hotstar.jpg

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று சத்யாவின் வருகைக்குப் பிறகு அனைவரின் முகத்திலும் ஒரு பதட்டம் தெரிகிறது. சத்யா தான் உழைத்து சம்பாதித்த காசில் தனது அக்காவிற்கும் மாமாவிற்கும் ஆடைகள் வாங்கி வந்துள்ளதாக கூறுகிறார். முத்து கோபப்படுவார் என மீனாவும் அவரது குடும்பத்தினரும் பயப்படும் வேளையில் முத்துவோ அந்த சட்டையை உடனே வாங்கி அணிந்து என் மச்சான் வாங்கி வந்த சட்டை நன்றாக இருக்கிறது எனக் கூறுகிறார். பின்னர் சத்யாவை வெளியே அழைத்து சென்று இது சிட்டியின் பணம் எனவும் இது நீ உழைத்து சம்பாதித்த காசு இல்லை எனவும் கூறி நீயே என்று உழைத்து சம்பாதிக்கிறாயோ அன்று நான் உன்னை பன்னீர் தூவி வரவேற்பேன் எனக் கூறிவிட்டு இனி இவ்வாறு செய்தாய் என்றால் கையோடு சேர்த்து காலையும் உடைத்து விடுவேன் என கூறுகிறார்.

பின்னர் விழா முடிந்து விட ரோகினியிடம் விஜயா புலம்புகிறார். அனைவரின் குடும்பத்தினரும் வருகிறார்கள், ஆனால் ரோகிணியின் குடும்பத்தினர் வருவதில்லை என வருத்தப்படுகிறார். அதோடு ரோகினியின் தாய் இறந்து விட்டதாக கூற, ரோகிணி மனம் உடைந்து தனது தாய்க்கு தொலைபேசியில் அழைத்து பேசுகிறார். அவரோ எனக்கு புரிகிறது கல்யாணி உனது நிலை என்றாவது இது மாறும் என ஆறுதல் கூறுகிறார்.

பின்னர் பாட்டி முத்துவிற்கும் மீனாவிற்கும் சுத்தி போட சொல்ல ஆனால் அனைவருக்கும் சுத்தி போட வேண்டும் என விஜயா வற்புறுத்துகிறார். கேட்டால் மனோஜும் ரோகினியும் புது கடைய ஆரம்பிக்கப் போகிறார்கள் ஸ்ருதியும் நிறைய சம்பாதிக்கிறார் எனலாம் கூறுகிறார். பின்னர் முத்துவிற்கும் மீனாவிற்கும் அறை இல்லாததால் அவர்கள் மாடியில் தூங்க போக பாட்டி அதை தடுக்கிறார். ரவியும் ஸ்ருதியும் அவர்களது அறையை கொடுக்க முன் வந்தாலும் அதை முத்து மீனா ஏற்கவில்லை. பின்னர், முத்துவும் மீனாவும் ஸ்ருதி கொடுத்த டெண்ட்டில் பாடல் பாடிக்கொண்டே இனிமையாக காதல் செய்து தூங்குகிறார்கள். பாட்டியோ அண்ணாமலையிடம் முத்துவிற்கும் மீனாவிற்கும் ஒரு அறை வேண்டும் எனக் கூறி, அதற்கு தானே பணம் அளிப்பதாகவும் கூறுகிறார். அதோடு இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

About Author