பாடியன் ஸ்டோர்ஸ் மற்றும் தமிழும் சரஸ்வதியும் தொடர்களின் மகாசங்கம் இன்று. தமிழ் சரஸ்வதியை அவரது வீட்டில் விடுவதற்கு காரில் வந்தார். சரஸ்வதி தன் அப்பாவை நினைத்து பயந்தார். வீட்டில் என்ன நடக்க போவதென்று பதறினார். வீட்டிற்கு வந்ததும் சொக்கலிங்கம் மற்றும் வாசுகி இருவரும் மாற்றி மாற்றி திட்டினார்கள். அந்த சமயம் தமிழ் அங்கு வந்து சரஸ்வதி மீது எந்த தவறும் இல்லை, செய்தது அனைத்தும் என் தவறுதான் என்று தமிழ் மன்னிப்பு கேட்டார். பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் அனைவரும் சென்னைக்கு வந்து கொண்டு இருந்தனர். மூர்த்தி கடையை அடித்துவிட்டு கிளம்பியது வருத்தமாக இருப்பதாக கூறினார். ஆனால் தனம் அவரை சமாதானம் செய்தார். கண்ணனும் கூட வந்து இருந்தால் நல்லா இருக்கும் என்று விரும்பினார் தனம். தமிழை கோதை அழைத்து சீக்கிரம் வருமாறு கூறினார். கார்த்திக் வசுந்தரா இருவரையும் ஆரத்தி எடுத்து கோதை வீட்டிற்குள் வரவேர்தனர். கண்ணன் மற்றும் ஐஷ்வர்யா இருவரும் சாப்பிடும் போது வீட்டில் யாரையும் காணவில்லையே என்று கண்ணன் கேட்டார். அதற்கு அனைவரும் சென்னைக்கு போன விஷயத்தை ஐஷ்வர்யா கூறினார். அதை கேட்ட கண்ணன் வருந்தினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க..