Tamizhum Saraswathiyum & Pandian Stores Today Episode | 17.11.2021 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் & பாண்டியன் ஸ்டோர்ஸ் சங்கமம் தொடரில் இன்று, தமிழ் வீட்டில் ரகளை செய்து கொண்டு இருந்த அந்த தொழிலாளர் கோதை மற்றும் குடும்பத்தை மோசமாக பேசினார். அதை அனைத்தையும் பார்த்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் போய் என்னவென்று விசாரிக்கலாமா வேணாமா என்று குழப்பத்தில் இருந்தார்கள். சற்று நேரத்தில் வீட்டில் அனைவரையும் உள்ளே அனுப்பிவிட்டு தமிழ் தானே இந்த பிரச்சனையை தீர்த்து வைப்பதாக கூறினார். சற்று நேரத்தில் ரகளை செய்த அந்த நபர் கத்தியை எடுத்து தமிழை குத்த வந்தார். இதை பார்த்துகொண்டு இருந்த மூர்த்தி ஒரு கல்லை எடுத்து அவரை குத்த விடாமல் தடுத்து எறிந்தார். பின் கதிர் ஜீவா மூர்த்தி மூவரும் சேர்ந்து அந்த நபரை அடுத்து துரத்தி விட்டார்கள். கோதை பண்டின் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் அனைவரையும் நன்றி கூறி வீட்டிற்குள் அழைத்தார். பின் அனைவருமm உள்ளே வந்த போது அவர்கள் வந்த வண்டியை டிரைவர் எடுத்துச் சென்றுவிட்டதாக முல்லை கூறினார். பின் கோதை அவர்களை உள்ளே அழைத்து உபசரித்தார். சந்திரகலா இதை பார்த்து இன்னும் எரிச்சல் கொண்டார். தமிழுக்கு இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்ததால் எதற்கும் ஜோசியரை வர வைத்து என்ன பிரச்சினை என்று பார்க்க முடிவு செய்தார் கோதை. ஜோசியரும் வந்தார் வீட்டிற்கு. பின் ஜாதகங்களை பார்த்து யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை, திருஷ்டி தன் இந்த வீட்டின் மீது பட்டிருக்கும் என்று ஓமம் வளர்க்க வேண்டும் என்று கூறினார்.அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author