தமிழும் சரஸ்வதியும் & பாண்டியன் ஸ்டோர்ஸ் சங்கமம் தொடரில் இன்று, மூர்த்திக்கு லேசாக கால் வலிப்பதாக தனத்திடம் கூறினார். தனம் உடனே அவரது தம்பிகளை கூப்பிட்டு மூர்த்தியை மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு கூறினார். பின் மூர்த்தி தனக்கு ஒன்னும் இல்லை, காலை வண்டியில் தொங்க போட்டு வந்தது தான் வலிக்கிறது என்று கூறினார். பின் கதிர் ஜீவா இருவரும் அவருக்கு கால் அமுக்கி விட்டர்கள். இதை தூரத்தில் இருந்த பார்த்த கோதை அந்த குடும்பத்தின் அழகை ரசித்தார். பின் வசுந்தராவிற்கு அழைத்து மனசுக்கு மிகவும் நெருடலாக உள்ளது என கூறினார் கோதை. பின் ஓமம் செய்ய பெண் வீட்டில் இருந்து சேலை எடுக்க வேண்டும் அதனால் கடைக்கு வருமாறு கேட்டார். அவர்களும் வருவதற்கு ஒப்புக்கொண்டார்கள். பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் அனைவருக்கும் புது துணிகள் வாங்கி கொடுத்தார் கோதை . அதற்கு பணமும் வாங்க மறுத்து விட்டார். இதனால் சங்கடத்தில் மூர்த்தி இருந்தார். சரஸ்வதி தமிழை நேரில் பார்க்க வேண்டும் என்று தன் பாட்டியிடம் கூறினார். ஆனால் பாட்டி கொஞ்ச நாள் இருவரும் பார்த்துக்கொள்ள வேண்டாம் என்று கூறினார். சொக்கலிங்கம் கோவம் குரையட்டும் பின் இதையெல்லாம் யோசிக்கலாம் என்று கூறினார்.அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….