Tamizhum Saraswathiyum & Pandian Stores Today Episode | 19.11.2021 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் , பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் அனைவரும் மகாபலிபுரம் செல்லலாம் என முடிவு செய்தனர். தனம் மூர்த்தி இருவரும் கால் வலிக்காக சற்று நடந்து கொண்டு இருந்தார்கள். அப்போது சொக்கலிங்கமm அந்த வழியாக சென்றதை பார்த்து கூப்பிட்டனர். இருவரும் குன்றகுடியில் பழக்கம் என்றும் கூறினார். பின் வீட்டுக்கு அழைத்து வந்தார் சொக்கலிங்கம். வீட்டில் அனைவரையும் அறிமுகம் செய்து வைத்தார். பின் அவர்களையும் மூர்த்தி மகாபலிபுரம் செல்ல அழைத்தார். ஆனால் அவர் வேலை இருப்பதாக கூறினார். பின் சரஸ்வதியை அழைத்து செல்வதாக கேட்டார். சொக்கலிங்கம்மும் ஒத்துக்கொண்டார். சரஸ்வதியை தமிழ் வீட்டிற்க்கு அழைத்து வந்தார்கள். கோதை சரஸ்வதியை பார்த்ததும் மிகுந்த சந்தோஷம் அடைந்தார்.வசுந்தராவையும் அழைத்து வருமாறு கார்த்திக்கிடம் கூறினார். அவரும் அழைத்தார். பின் சரஸ்வதி சொக்கலிங்கத்திற்கு அழைத்து தான் தமிழ் வீட்டில் இருப்பதாக கூறினார். இவர்கள் இங்கு தான் தங்கி இருப்பதாகவும் கூறினார். இதை கேட்ட சொக்கலிங்கம் பரவாயில்லை அவர்களுடன் செல்ல அனுமதிக்கிரேன் என்று கூறினார். இதை கேட்ட தமிழ் சரஸ்வதியும் சந்தோசமாக கிளம்பினார்கள்.அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

About Author