Tamizhum Saraswathiyum Serial Today Episode | 17.10.2022 | Vijaytv
tamizhum Saraswathiyum. 17.10.2022
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் தன் வாழ்க்கையை ஆரம்பித்துவிட்ட நிலையில் தன் சந்தோசத்தை நமச்சி இடம் சொல்லி மகிழ்ந்தார். ராகினி தன்னை இந்த மழையில் யார் அழைத்து செல்வார்கள் என்று ஆவலாக இருந்தார். ஆனால் வராது மனதில் அர்ஜுன் தான் வந்து அழைத்து வர வேண்டும் என்று ஏங்கினார். ஆனால் வந்ததோ ஆதி. ஆதி வந்ததில் ராகினிக்கு பெரிய சந்தோசம் கொடுக்கவில்லை என்றாலும் அதை காட்டிக்கொள்ளாமல் வீட்டுக்கு கிளம்பினார். பின் வீட்டில் விட்ட ஆதிய பார்த்த சரஸ்வதி கொஞ்சம் குழம்பினார். ராகினி ஆதி இருவரும் வீட்டுக்கு ஒன்றாக வந்ததை பார்த்த வசுந்தரா மிகவும் சந்தோசம் கொண்டார். தன் வீட்டுக்கு மருமகளாக ராகினி போவதில் அவருக்கு மிகவும் சந்தோசம். ராகினிக்கு அர்ஜுன் வரவில்லை என்று கோவமாக இருந்தார். அந்த கோவத்தை அர்ஜுன் ஃபோன் செய்த உடன் கொட்டினார். அர்ஜுன் தன்னால் வர முடியவில்லை என்று புரியவைக்க முயற்சி செய்தார். ஆனால் அதை கேட்கும் நிலையில் ராகினி இல்லை. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…