தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி தன் பாட்டியை மருத்துவமனைக்கு அழைத்து சென்று இருந்தார். பாட்டிக்கு எந்த ஒரு பிரச்சனையும் உடம்பில் இல்லை. அனைத்தும் சரியாக உள்ளது என்று கூறினார் டாக்டர். சற்று நேரத்தில் CK வந்திருப்பதாக ஒருவர் வந்து கூற, டாக்டர் பட படவென பாதியில் சரஸ்வதியிடம் பேசுவதை நிறுத்தி இரண்டு மாசம் கழித்து வருமாறு கூறி கிளம்பிவிட்டார். பின் வந்திருந்த அனைத்து நோயாளிகளையும் உள்ளே அனுமதிக்கவில்லை. லிஃப்ட் சந்திரகலா செல்லும் வரை யாரும் உபயோகிக்க கூடாது என்று கூறினார்கள். அதை சரஸ்வதி கேட்டு தட்டிக்கேட்டார். பின் சந்திரகலா இங்கு எல்லாம் நிக்க முடியாது என்று சரஸ்வதி மேல் கோவம் கொண்டு படியில் இறங்கி சென்றார். பின் சரஸ்வதி மன்னிப்பும் கேட்டார் சந்திரகலாவிடம். ஆனால் அதை மதிக்காமல் அவர் கோவமாக பேசிச்சென்றார்.பின் நடந்ததை தமிழிடம் கூறினார் சரஸ்வதி. தமிழ் இதை எதையும் நினைத்து வருத்தப்பட வேண்டாம் என்று கூறினார். பின் இருவீட்டிலும் பந்தக்கால் ஊன்றினர். முழு எபிசோட் தெரிந்து கொள்ள காணொளியை பார்க்க…