தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கோதை வீட்டில் கல்யாண வேலைகள் தடபுடலாக நடந்தது.கார்த்திக் வீட்டிலும் நலங்கு வைத்து சாமி கும்பிட்டு மண்டபத்திற்கு புறப்பட்டனர். வசுந்தரா வீட்டிலும் அவருக்கு நலங்கு வைத்து சாமி கும்பிட்டு மண்டபத்திற்கு புறப்பட்டனர். தமிழ் ஆதிக்கு அழைத்து மாப்பிள்ளை வீட்டார் வரும்போது பெண் வீட்டார் தான் வரவேற்க வேண்டும் என்று கூறினார். அதைக்கேட்ட சந்திரகலா வேண்டும் என்றே சீக்கிரம் கிளம்பியதாக பொய் சொல்லி கோதை வீட்டை மண்டபத்திற்கு முன்னரே வர வைத்து தன்னை வரவேற்கும்படி செய்தார். கோதை அதையும் பெருமிதமாக எடுத்துக்கொண்டார். பின் மண்டபத்தில் வேலைகள் அனைத்தையும் சரி பார்த்தனர். சாப்பிடும் இடத்தில் VIP க்கு தனியாக ஒரு இடத்தை ஒதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அதை பார்த்த கோதை மிகவும் கோபம் கொண்டார். யாரை கேட்டு இப்படி பிரித்தீர்கள் என்று ஆவேசம் கொண்டார். இந்த பிரிவினை இருக்க கூடாது என்று தான் அன்னைக்கே கூறினேன் என்றார். ஆனால் சந்திரகலா தான் இந்த செயலை செய்ய சொன்னதாக கூறினார் அவர். அதற்கு கோதை என்ன கூறினார்? காணொளியை பார்க்க…