Tamizhum Saraswathiyum Today Episode | 01.12.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 01.12.2022

tamizhum Saraswathiyum. 01.12.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, அர்ஜுன் மூன்று வீடுகளை பார்த்து விட்டு கோதை வீட்டுக்கு திரும்பினார். வந்ததும் எந்த வீடு பிடித்து இருந்தது என்று விசாரித்தார்கள். ஆனால் அர்ஜுன் தனக்கு எந்த வீடுமே பிடிக்கவில்லை என்று கூறினார். இதை கேட்டதும் அனைவரும் என்ன வசதி குறைவு என்று கேட்டார்கள். பின் அர்ஜுன் அந்த வீடுகளில் எந்த குறையும் இல்லை. வசதிக்கும் பஞ்சம் இல்லை. ஆனால் எனது சம்பளம் 65 ஆயிரம் தான் அதில் வீட்டு வாடகைக்கு 40 ஆயிரம் செலவு செய்தால் என்னால் குடும்பத்தை நடத்த முடியாது என்று கூறினார். இதனால் தன் நண்பர்கள் இடம் கூறி வேறு வீடு என் சம்பளத்தில் குடும்பம் நடத்தும் படி செய்ய போகிறேன் என்று கூறினார். இதை கேட்டதும் கோதை நடேசன் இருவரும், உங்கள் பக்கம் இருந்து யோசிக்காதது எங்கள் தவறு தான் என்று கூறினார்கள். பின் அனைவரும் சாப்பிட சென்றார்கள். கோதை மற்றும் நடேசன் இருவரும் தன் மகள் தூரமாக செல்வதை நினைத்து வருந்தினார்கள். கோதை ராகினி வேலைக்கும் சென்று வீட்டையும் பார்த்து நம்மை விட்டு தூரமாகவும் இருப்பதை நினைத்து வருந்தினார். எப்படி சமாளிப்பார் என்று யோசனையாக இருந்தது. ஆனால் கோதைக்கு தன் மகள் மருமகன் இருவருமே நம் வீட்டிலேயே தங்கிவிட்டால் பிரச்சனை இருக்காது என்று நடேசன் இடம் பேசிக்கொண்டு இருந்தார். ஆனால் அவர்கள் பேசுவதை கேட்ட அர்ஜுனின் அம்மா மற்றும் அக்கா இருவரும் சேர்ந்து கத்த ஆரம்பித்தார்கள். என் தம்பி எப்படி இந்த வீட்டோடு மாப்பிள்ளையாக்க திட்டம் போடலாம். ஏழை குடும்பம் என்றால் எது சொன்னாலும் கேட்போம் என்று உங்களுக்கு எண்ணம் என்று கத்த ஆரம்பித்தார்கள். கடைசியில் அர்ஜுன் என்ன முடிவு எடுத்தார் என்று கேட்டார் கோதை. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

About Author