Tamizhum Saraswathiyum Today Episode | 02.06.2022 | Vijaytv
tamizhum Saraswathiyum. 02.06.2022
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் கோதையிடமும் குடும்பத்தில் அனைவரிடமும் நம்பிக்கையாக பேசினார். மேலும் தன்னால் முடிந்த வரை இந்த புராஜக்ட் கிடைக்க போராடுவேன் என்று கூறினார். மேலும் தன் அப்பா அம்மாவிடம் ஆசீர்வாதமும் வங்கிவிட்டு வேலை செய்யும் இடத்துக்கு கிளம்பினார். அவர் கிளம்பிய பின் கோதை கார்த்திகிடம் இது நம் வீட்டு பிரச்சனை, இது நம் வாழ்க்கைப் பிரச்சனை அதனால் குடும்பமாக சேர்ந்து நின்று இந்த வேலையை செய்ய வேண்டும் என்று அறிவுரை கூறினார். மேலும் இதில் ஒருத்தர் மீது இன்னொருத்தர் கர்வம்கொள்ள வேலையே இல்லை, இது நமது கம்பேனியின் வேலையாக பார்க்க வேண்டும் என்று அறிவுரை கூறினார். அதை கேட்ட பின் தான் கார்த்திக் தன செய்தது தவறு என்று உணர்ந்தார். தான் கொஞ்சம் நிதானமாக இருந்து இருந்தால் இந்த புராஜக்ட் நமக்கே கிடைத்து இருக்கும் ஆனால் நான் சரிவர ஈடுபாடு குடுக்காததால் தன் இவளோ பெரிய பிரச்சனையாக மாறியது என்று உணர்ந்தார். உடனே வேலை நடக்கும் இடத்துக்கு கிளம்பினார். போகும் வழியில் சந்திரகலா கார்த்திக்கு அழைத்து பேசினார். மேலும் அவரை தமிழுக்கு எதிராக பேசி மாத்த முயற்சி செய்தார். ஆனால் கார்த்திக் தனக்கு இப்போது தான் பிரச்சனை எவ்ளோ பெரியது என்று புரிந்தது, இது எங்க குடும்பமாக சேர்ந்து செய்ய வேண்டிய வேலை எனவும் தன் குடும்பத்துக்கு பரிந்துரைத்தார். இதனால் சந்திரகலா இனி கார்த்திக் இடம் பேசுவது நேரத்தை மட்டுமே வீணடிக்கும் என்று நினைத்தார் சந்திரகலா. இதனால் வேறு ஒரு வழியில் இந்த புராஜக்ட்டை நடக்க விடாமல் செய்ய வேண்டும் என்று திட்டம் போட்டார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க..