தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கார்த்திக் வசுந்தரா, தமிழ் சரஸ்வதி நால்வரும் வீடு திரும்பினார்கள். அவர்களை ஆரத்தி எடுத்து வரவேற்றார்கள். பின் அனைவரையும் ஓய்வு எடுத்துக்கொள்ளும் படி கூறினார்கள். அப்போது சரஸ்வதி கோதை இடம் பேசினார். வசுந்தராவின் அம்மாவை வசுந்தரா மோசமாக பேசி வெளியே அனுப்பி விட்டார். அது நம் வீட்டை விட்டுக்கொடுக்காமல் இருக்க பேசினாலும், அம்மாவிடம் அப்படி பேசி சண்டை ஆவது குடும்பத்துக்கு நல்லது இல்லை. மேலும் அம்மா அப்பாவுடன் பேசாமல் இருப்பது பெரிய வலி என்றும் கூறினார். இதை பற்றி கோதையும் மனதில் நினைததாக கூறினார். மேலும் உடனே சந்திரகலாவுக்கு அழைத்து பேசவும் செய்தார். அன்று நடந்தது வருத்தம் தான், ஆனால் பழசை மறந்து மீண்டும் வசுந்தராவை பார்க்க வீட்டுக்கு வர வேண்டும் என்று கூறினார். கார்த்திக் வசுந்தரா இப்போது நல்லபடியாக ஊருக்கு போய் வந்து சந்தோசமாக இருப்பதாகவும் கூறினார். இதை கேட்ட சந்திரகலா உடனே வசுந்தராவை பார்க்க கிளம்பினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…