Tamizhum Saraswathiyum Today Episode | 03.07.2023 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, நடேசன் தான் கோதையின் தோல்விக்கு முழு காரணம் என்று அர்ஜுன் கூறினார். அதை கேட்டதும் வீட்டில் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். பின் ஒவ்வொருவராக நடேசன் தான் காரணம், எப்படி கோதைக்கு இப்படி ஒரு துரோகம் செய்ய முடியும் என்று கேட்டார்கள். இதிலும் ராகினி மிகவும் மோசமாக பேசினார். உங்களுக்கு எங்களை விட அந்த தமிழ் தன உயர்ந்தவன் போல் நடந்து கொண்டீர்கள் என்று ஆளாளுக்கு பேசினார்கள். நடேசன், தான் செய்ததற்கு என்ன காரணம் என்று கூறினார். இந்த வீடியோவில் கோதைக்கு ஓட்டு போட கூடாது என்று நன் கூற வில்லை. அவள் பதவிக்கு ஆசை படுபவழும் இல்லை. தமிழ் மேல் இருக்கும் பழி உண்மையோ பொய்யோ, அதை காரணம் காட்டி ஓட்டு கேட்பது என்பது நேர்மையான முறை இல்லை. கோதையின் பெயர் கெட்டுப்போக கூடாது என்று தான் அப்படி ஒரு வீடியோ எடுத்து அனுப்பினேன் என்று கூறினார். அதை கேட்டதும் மீண்டும் ராகினி, இந்த கதியெல்லம் வேண்டாம் என்று கூறினார். உடனே கோதை என் கணவரை பற்றி பேச இங்க யாருக்கும் தகுதி இல்லை. இத்தனை வருடங்களாக எந்த இடத்திலும் அவர் என்னை விட்டு கொடுத்தது இல்லை. கம்பேனியில் கூட எனக்கு முன்னுரிமை கொடுத்து தான் நடந்ததுகொள்வார். அவர் எந்த தவ்ரும் செய்யவில்லை, நன் தோல்வி அடைந்ததற்கு அர்ஜுன் தான் காரணம் என்று கூறினார். ஆனால் ராகினி கதற ஆரம்பித்தாள். அர்ஜுன் எந்த விதத்தில் காரணம் என்று கேள்வி கேட்டார். அதுக்கு கோதை, உன் புருஷன் செய்த காரியம் ஊருக்கே தெரியும். என் கணவரை பேசுவதற்கு இங்கு யாருக்கும் தகுதி இல்லை என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author