Tamizhum Saraswathiyum Today Episode | 05.12.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 05.12.2022

tamizhum Saraswathiyum. 05.12.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, அர்ஜுன் குடும்பத்தில் அனைவரும் எதோ பெரிய விருந்து இருக்கும் என்று நம்பி வந்தார்கள். ஆனால் காலையில் எழுந்ததும் அருகம்புல் ஜூஸ், பின் காலை உணவாக சிறுதானியத்தில் சமைத்த உணவு என்று அவர்களுக்கு எந்த உணவும் பிடிக்கவில்லை. இருந்தாலும் வேறு வழி இல்லாமல் அதை சாப்பிட்டார்கள். இவர்கள் செய்த உணவை எப்படி சாப்பிடுகிறார்கள் என்று கார்த்திக் மற்றும் வசுந்தரா இருவரும் பார்த்து சிரித்து கிண்டல் செய்தார்கள். பின் தமிழ், கார்த்திக் இருவரும் வேலைக்கு கிளம்பினார்கள். அவர்கள் கூடவே அர்ஜுன் தானும் கிளம்பினார். பின் கோதை கோவிலுக்கு கிளம்பினார். குடும்பமாக சேர்த்து கோவிலுக்கு சென்று அனைவரும் கும்பிட வேண்டும் என்று அவர் மனதில் நினைத்ததால் தான் அர்ஜுன் வேலைக்கு செல்லாமல் அவர்கள் கூட வந்தது போல் பேசினார். பின் கம்பெனியில் தமிழ் மற்றும் கார்த்திக் இருவரையும் பார்க்க ஒருவர் வந்தார். அவர் இதுவரை தந்த விலையை விட ஒரு கிலோவுக்கு ஒரு ரூபாய் ஏத்தப்போவதாக கூறினார். அதை பேசிக்கொண்டு இருக்கும்போதே அர்ஜுன் அங்கு வந்து சேர்ந்தார். இந்த டீலிங் சரி வராது என்று அர்ஜுன் கூறினார். ஒரு கிலோவுக்கு ஒரு ரூபாய் ஏற்றுவது உடனே வாய்ப்பு இல்லை என்று கூறினார். இதை அர்ஜுன் சொன்னதால் அவர் இதில் தலையிட தேவை இல்லை என்றார். மேலும் இந்த கம்பேனியில் முடிவு எடுக்க வேண்டியது தமிழ் மற்றும் கார்த்திக் தான். நீங்கள் இதில் தலையிட வேண்டாம் என்று கூறினார். ஆனாலும் தமிழ் மற்றும் கார்த்திக் இருவரும் அவரை மரியாதையாக பேச வேண்டும் என்று கூறினார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

About Author