Tamizhum Saraswathiyum Today Episode | 07.03.2022 | Vijaytv
Tamizhum Saraswathiyum. 07.03.2022
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் மற்றும் சரஸ்வதி இருவருக்கும் சாப்பாடு அவர்கள் அறைக்கே வந்து சேர்ந்தது. இதனால் நம்ம வீட்டில் ஒதுக்குகிரார்களோ என்று வருந்தினார். உடனே தமிழும் இதை நான் அம்மாவிடம் கேட்பேன் என்று கிளம்பினார். கீழே வந்து பார்த்தால் அனைவரும் குடும்பமாக அமர்ந்து அப்பிட்டார்கள். அது பார்த்ததும் தமிழின் கோவம் அதிகரித்தது. தன் ஆதங்கத்தை கேட்க கோதையை அழைத்தார். ஆனால் சாப்பிடும் பொது யாரும் பேசுவதில்லை என்று அலட்சியம் செய்தார் கோதை. பின் அனைவரும் சாப்பிட்டு முடிக்கும் வரை காத்திருந்து தமிழ் பேச முன் வந்தார். தங்களை மன்னித்து ஏத்துக்கொண்டு வீட்டுக்கு வந்த பின் எங்களை எதற்காக ஒதுக்க வேண்டும் என்று கேட்டார். அதற்கு கோதை பொறுமையாக நானே பேச வேண்டும் என்று இருந்தேன் என்று ஆர்மபிதார். சரஸ்வதி படிக்காததை மறைத்து திருமணம் செய்தது மைடும் என் கோவம் இல்லை. என் நம்பிக்கையை உடைத்துவிட்டீர்கள். என் பிள்ளைகள் மூவரையும் தங்கவென்று பெருமை பேசினேன். ஆனால் அதையும் சுக்கு நூராக உடையதுவிட்டீர்கள் என்றார். இனி நீங்கள் செய்ததற்கான தண்டனையாக என்ன செய்ய வேண்டும் என்று நானே சொல்லுவேன் என்றார். பின் தமிழ் சரஸ்வதி இருவரும் இந்த வீட்டில் இருக்கலாம் ஆனால் யாரும் அவர்களிடம் பேசவோ பழகவோ மாட்டார்கள். அதே போல் கம்பேனிக்கு தமிழ் போகலாம் வேலை பார்க்கலாம் ஆனால் எந்த முடிவுகளும், நிர்வாகமும் அவர் பொறுப்பில் இருக்காது. அனைத்து பதவியும் அதிகாரமும் கார்த்திக்கு மட்டுமே என்றார். இதை கேட்ட வசுந்தரா அதிர்ச்சியில் கேள்வி கேட்டார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…