Tamizhum Saraswathiyum Today Episode | 08.10.2021 | Vijaytv
tamizhumsaraswathiyum.08.10.2021
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் தன்னால் முடிந்ததை செய்து ஷ்யாமை கெட்டவன் என புரிய வைக்க வேண்டும் என்று முயற்சித்தார். ஆனால் அவரை யாரும் நம்பவில்லை. சொக்கலிங்கமும் ஷ்யாம் சொல்வதை மட்டுமே வேதவாக்காக எடுத்துக்கொண்டார். தமிழை கைது செய்வதை பார்த்த சரஸ்வதியின் தம்பி வீட்டில் சொல்ல. அதை கேட்டதும் நானே காவல் நிலையத்தில் போய் தமிழை காப்பாத்துவேன் என்று கிளம்பினார். காவல் நிலையத்தில் தமிழுக்காக பேசினார் சரஸ்வதி. ஷ்யாம் அவரை வீட்டிற்க்கு போகும்படி கூறினார். சொக்கலிங்கம் கோபப்பட்டார். சற்று நேரத்தில் தப்பான தொழில் செய்தவர்களை போலீஸ் கைது செய்து கூட்டிவந்தனர். அதில் ஷைலஜா வருவதை பார்த்து தனக்கு தெரிந்த உண்மையை கூறும்படி கேட்டுக் கொண்டார் சரஸ்வதி. அதனால் உண்மைகளை ஒப்புக்கொண்டார் ஷைலஜா. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….