Tamizhum Saraswathiyum Today Episode | 09.03.2022 | Vijaytv
Tamizhum Saraswathiyum. 09.03.2022
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி அறையில் என்ன செய்வது என்று தெரியாமல் கீழே இறங்கி வந்தார். அடுப்பங்கரைக்குள் சென்றால் அபி எந்த வேலையும் செய்ய விடவில்லை. என்ன வேண்டும் என்று சொன்னால் தானே செய்து தருவதாக கூறினார். பின் டி.வியை பார்க்கலாம் என்று அதை போட்டார். ஆனால் அது சத்தம் அதிகமாக வந்ததால் நடேசன் முறைத்தார். இதனால் தன் அறையிலே இருந்துவிடலாம் என்று மேலே சென்றார். மேலே வசுந்தராவும் பொழுது போகாமல் வெளியே வந்து பேசினார். என்ன சரஸ்வதி இந்த வீட்டில் பொழுது போகவில்லையா என்று விசாரித்தார். சரஸ்வதியும் தன் கவலையை கூறினார். தன்னிடம் யாரும் பேசுவதில்லை, எந்த வேலையும் செய்யவும் வேண்டாம் இதனால் எரிச்சலாக இருக்கிறது என்றார். அதே போல் வசுந்தரா அவர் பக்க புலம்பலை கூறினார். பின் சரஸ்வதியின் அடுத்த கட்டமாக என்ன செய்ய போவதாக கேட்டார். அப்போது சரஸ்வதி தன் படிப்பை எப்படியாவது முடிக்க வேண்டும் என்று கூறினார். தான் எப்படியாவது படித்து M.B.A பட்டம் வாங்க வேண்டும் என்று கூறினார். இதை கேட்ட வசுந்தரா அவரை உற்சாகப்படுத்தினார். சந்திரகலா வீட்டுக்கு வந்து கல்யாண செலவுகள் கணக்கு வழக்குகளை ஒப்படைக்க வந்தார். அப்போது தமிழ் ஆற்காடு பாய் இடம் 20 லட்சம் கடன் வாங்கி அதை சொக்கலிங்கத்துக்கு கொடுத்த விஷயத்தை கூறினார். ஆனால் கோதை தன் மகனை விட்டுக்கொடுக்காமல் பேசினார். கம்பேனி நிருவாகத்தில் தமிழ் எந்த தவறும் செய்ய மாட்டான் என்று தமிழுக்காக பேசினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…