Tamizhum Saraswathiyum Today Episode | 10.12.2021 | Vijaytv
Tamizhum Saraswathiyum.10.12.2021
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கீதா சரஸ்வதியை பற்றி விசாரித்ததை நினைத்து சரஸ்வதி பயந்தார். தமிழ் சரஸ்வதிக்கு எதார்த்தமாக அழைத்தார். சரஸ்வதியும் தன் பயத்தை கூறினார். நாளை பொண்ணு கேட்டு வருவோம் என்று மகிழ்ச்சியாக கூறினார். வசு வீட்டில் தன் அம்மா வீட்டில் அணியும் உடைகள் போல கோதை வீட்டிலும் அணிந்தார். அதை பார்த்ததும் தமிழ் மற்றும் நடேசன், கொதையிடம் எடுத்து சொல்லுமாறு கூறினார்கள். கோதையும் இந்த உடை இந்த வீட்டில் அணியவேண்டாம் என்று எடுத்து கூறினார். வசுவும் அதை கேட்டு மாற்றிக்கொள்கிறேன் என்று கூறினார். சரஸ்வதி மற்றும் பாட்டி இருவரும் சாப்பிடாமல் இருந்ததால் சரஸ்வதியின் தம்பி தங்கை இருவரும் சாப்பிடவில்லை. பின் சொக்கலிங்கம் திருமணம் செய்யும்போது அவரும் பொய் சொல்லிதான் கல்யாணம் செய்தார் என்று பாட்டி அனைவர் முன்னும் உண்மையை கூறினார். ஆனால் அதற்கு பின்னும் சொக்கலிங்கம் பொய் சொல்லி இந்த திருமணத்தை நடத்த முடியாது என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…