தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் வீட்டுக்கு உமாபதி வந்து நடந்ததை கூறினார். தனக்கு கோதை அம்மா கோர்ட்டில் இருந்து நோட்டீஸ் கொடுத்ததை பற்றி விவரமாக கூறினார். மேலும் இதில் தன் தவறு எதுவுமே இல்லை, தவறு செய்தவர்கள் கோதை கம்பேனியில் பத்விகளில் இருக்கிறார்கள். ஆனால் என் மேல் இப்படி ஒரு நஷ்ட ஈடு கேட்பது எனக்கும் என் தொழிலுக்கும் பாதிப்பு வரும் என்று கூறினார். இதை கேட்டு தமிழ் குழப்பம் அடைந்தார். அதே நேரம் அர்ஜுன் இந்த திட்டம் சரியாக நகர்கிறது என்று கூறினார். இந்த திட்டத்தின் மூலம் தமிழ் கோதைக்கு துணையாக இருந்தால், உமாபதியை இழக்க நேரிடும். அதே நேரம் உமாபதிக்கு உதவினால் கோதையை மேலும் கோவ்ப்படுத்தும். இதில் எது நடந்தாலும் தனக்கு சாதகமாக விஷயம்தான் என்று சந்தோசமாக இருந்தார். பின் நடேசன் தமிழை பார்த்து பேசினார். நம் பக்கம் நியாயமான கோரிக்கை தான் வைத்து உள்ளோம். எந்த வித முன் அறிவிப்பும் இல்லாமல் ஒரு காண்ட்ராக்ட்டை நிறுத்தினால் அது தவறுதான் என்று கூறினார். மேலும் இதில் கோதைக்கு உதவினால் கண்டிப்பாக குடும்பம் ஒன்றாகும் என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….