Tamizhum Saraswathiyum Today Episode | 13.09.2022 | Vijaytv
tamizhum Saraswathiyum. 13.09.2022
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சந்திரகலா மீண்டும் கோதை வீட்டுக்கு வந்தார். மீண்டும் வசுந்தரா கர்பம் ஆனதற்கு ஒரு சிறு விசேஷம் ஏற்பாடு செய்து இருப்பதாக கூறினார். இரவு குடும்பமாக அனைவருமே வரவேண்டும் என்று கூறினார். ஆனால் தமிழ் கார்த்திக் இருவருமே அதான் அம்மா அதற்கு அனுமதி கொடுக்கவில்லையே என்று கூறினார். ஆனால் சந்திரகலா அதை பற்றி பேச தான் வந்து இருப்பதாக கூறினார். மேலும் இது பெரிய அளவில் செய்யவில்லை. சிறிதாக நம் இரு வீட்டார்கள் மட்டும் சேர்ந்து ஒரு சின்ன விருந்து மாதிரி தான் என்று கூறினார். இருவீட்டார் மட்டும் இருந்தால் அது ஒண்ணும் பெரிய விஷயம் இல்லையே என்று சரஸ்வதி நினைத்தார். வசுந்தராவும் தன் அம்மா வீட்டுக்கு போக வேண்டும், இந்த சந்தோசமான விஷயத்தை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தார். ஆனால் கோதை அம்மா அதற்கு ஒத்துக்கொள்வாரா என்று யோசித்தார். பின் சந்திரகலா நான் ஸ்மாபந்தி யிடம் பேசிக்கொள்கிரேன் என்றார். வசுந்தரா தன் அம்மா வீட்டுக்கு போக போவதை நினைத்து சந்தோசமாக இருந்தார். கோதை கோவிலில் இருந்து வந்ததும் உடனே தன் அம்மா வந்தது பேசியதை பற்றி கூறினார். ஆனால் அதை கேட்டதும் கோதை கோவம் கொண்டார். அதான் இந்த மாதிரி விசேஷம் எதுவும் வேண்டாமா என்று சொன்ன பின்னும் எதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோவம் கொண்டார். ஆனால் சரஸ்வதி வசுந்தரா வீட்டில் தான் சின்ன விருந்து தான். சொந்தங்களை எல்லாம் கூப்பிடவில்லை நம் வீட்டில் உள்ளவர்கள் மட்டும்தான் என்று கூறினார். ஆனால் கோதை அதற்கு சம்மதிக்கவில்லை. இதனால் வசுந்தரா மிகுந்த வருத்தத்துடன் இருந்தார். இது பார்த்த சரஸ்வதி கண்டிப்பாக கோதை அம்மாவை சம்மதிக்க வைப்பேன் என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…