Tamizhum Saraswathiyum Today Episode | 14.07.2022 | Vijaytv
tamizhum Saraswathiyum. 14.07.2022
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கார்த்திக் மற்றும் வசுந்தரா இருவரையும் மீண்டும் அடுத்த நாள் அழைத்து பேசினார் கோதை. என்னதான் நம் வீட்டுக்குள் பிரச்சனை நடந்தாலும் அதை தன் அம்மாவிடம் கூட விட்டுக்கொடுக்காமல் பேசியதால் வசுந்தரா மீது கொடதைக்கு ஒரு நல்ல அபிப்பிராயம் வந்தது. அதை பாராட்டவும் செய்தார். இது ஸ்னதோசத்தை கொடுத்தாலும் சம்பந்தியை அப்படி பேசியது சிறு வருத்தம் இருப்பதாகவும் கூறினார். ஆனால் காதலித்து திருமணம் செய்து எதற்காக ஒரு வீட்டுக்குள் தனித்தனியே வாழ வேண்டும் என்று கேள்வி கேட்டார். அதற்கு கார்த்திக் எந்த பதிலும் சொல்லவில்லை. அப்போது சரஸ்வதி இதற்கு நானும் தமிழும் தான் காரணம் என்றார். ஒன்றும் புரியாமல் விளக்கமாக கேட்டார் கோதை. உடனே சரஸ்வதி, கார்த்திக் இன்னும் தமிழ் மற்றும் என் மீது கோவமாக இருக்கிறார். ஆனால் அப்படி இல்லாமல் ஒரு வீட்டுக்குள் ஒத்துமையாக இருக்க வேண்டும் என்று வசுந்தரா விரும்பினார். அதனால் தான் கார்த்திக் வசுந்தரா பிரிந்து இருக்கிறார்கள் என்று கூறினார். இதை கேட்டதும் கோதை அதிர்ச்சி அடைந்தார். மேலும் என் பிள்ளைகளுக்குள் இப்படி ஒரு பிரிவு வர நாமே காரணம் ஆகி விட்டோமே என்று வருந்தினார். ஆனால் இனி இது போல் நடக்க கூடாது என்று அறிவுரை கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…