Tamizhum Saraswathiyum Today Episode | 15.09.2022 | Vijaytv
tamizhum Saraswathiyum. 15.09.2022
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சந்திரகலா வீட்டில் விசேஷம் களை கட்டியது. வீட்டில் அனைவருமே சந்தோசமாக இருந்தார்கள். அப்போது ஆட்டம் பாட்டம் என்று குடும்பமாக சேர்ந்து இருப்பதில் வசுந்தரா மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். பின் விசேஷம் முடிந்ததும் கோதை அவரது குடும்பத்தை வீட்டுக்கு கிளப்பினார். அப்போது சந்திரகலா அவரை அசிங்க படுத்த வேண்டும் என்று நினைத்தார். உடனே கோதை இடம், நீங்கள் சொன்னதுக்கு மாறாக நடக்காது என்று இருந்த போது அதை ungl எதிர்ப்பையும் மீறி நான் நடத்தி காட்டி விட்டேன் என்று குத்தலாக பேசினார். மேலும் கோதையை தான் ஜெயித்து விட்டேன் என்பது போல் பேசினார். ஆனால் அதற்கு பதிலடி கொடுப்பது போல் கோதை பேசினார். இங்கு யார் ஜெயித்தது தோர்த்தது என்று பார்க்க இது போட்டி இல்லை. நான் ஒரு காரணமாக தன இந்த விசேஷம் வேண்டாமா என்றேன். ஆனால் அதை ஏற்காமல் என் மீது இருக்கும் பயத்தால் என்னிடம் சொல்லாமலே இந்த ஏற்பாட்டை செய்து விட்டீர்கள் என்று கூறினார் கோதை. அதை கேட்ட சந்திரகலா மீண்டும் என்னை அசிங்க படுத்தி விட்டதாக நினைத்தார். அந்த நேரம் கீதா அவரை மேலும் தூண்டி விட்டார். ஆதிக்கு ராகினியை திருமணம் செய்து வைத்தால் கண்டிப்பாக கோதை பிடி நம் கையில் தான் என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது ? காணொளியை பார்க்க…