Tamizhum Saraswathiyum Today Episode | 16.02.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum 16.02.2022

tamizhum Saraswathiyum 16.02.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கோதை கண் முழித்து விட்டார் என்று தெரிந்ததும் குடும்பத்தில் அனைவரும் மகிழ்ச்சியில் அவரை பார்க்க சென்றார்கள். தமிழ் சரஸ்வதியை உள்ளே போக வேண்டாம் என்று சொக்கலிங்கம் தடுத்தார். கோதை நல்லபடியாக ஆகட்டும் பின் பர்த்துக்கொள்ளலாம் என்று கூறினார். ஆனால் தமிழ் தன்னால் அம்மாவை பார்க்காமல் இருக்க முடியாது என்று உடனே கோதையை பார்க்க கிளம்பினர். கோதை கண் விழித்து அனை பார்த்தார். அந்த நேரம் தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் கை கூப்பி தங்களை மன்னிக்குமாறு கேட்டார்கள். அவர்களை பரத்ததும் கோதைக்கு மீண்டும் படபடப்பு அதிகரித்தது. மீண்டும் அவரது நிலை மோசமாகி மயங்கினார். உடனே டாக்டரை அழைத்து பார்த்ததில் அவர் நிலை மீண்டும் மோசமாகிவிட்டது என்று கூறினார். எதற்காக கோதைக்கு பிடிக்காதவர்களை பார்த்து அவரை மீண்டும் கோவம் அடைய செய்கிறீர்கள் என்று டாக்டர் கத்தினார். நடேசன் கோவத்தில் தமிழ் சட்டையை பிடித்து வெளியே போ டா என்று கத்தினார். தன் கோதையை பார்க்க வரதே என்று கூறியும் அங்கு வந்து நின்று மீண்டும் அவளை கவலைக்கிடமாக மாற்றிவிட்டாய் என்று கத்தினார். உடனே அந்த இடத்தை விட்டு வெளியே போ என்று கத்தினார். சொக்கலிங்கம் இதை பார்த்து அவர் வீட்டுக்கு அழைத்தார். உடனே கிளம்பலாம், கோதை சரி ஆன பின் வந்து பார்த்துக்கொள்ளலாம் என்று கூறினார். ஆனால் தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் வேறு ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்று கிளம்பினார்கள். கோதையை பார்த்த இருதய சிகிச்சை நிபுணர் உடனே அவருக்கு ஆபரேஷன் செய்ய வேண்டும், கோதைக்கு இதயத்தில் அடைப்பு உள்ளது என்று கூறினார். உடனே அவருக்கு தேவையான இரத்தத்தை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறினார். ராகினி தமிழ் அண்ணனுக்கு தான் அம்மாவின் இரத்த வகை என்று கூறினார். ஆனால் சந்திரகலா தமிழ் இடம் இருந்து இரத்தம் வாங்க கூடாது என்று முடிவு எடுத்தார். அதனால் வேறு வழியில் இரத்தம் வாங்க முடிவு எடுத்தார். வசுந்தரா உடனே தமிழுக்கு அழைத்து இரத்தம் தேவைப்படும் விஷயத்தை கூறினார். உடனே தமிழ் மருத்துவமனைக்கு வந்து தான் இரத்தம் கொடுப்பதாக கூறினார். ஆனால் நடேசன், சந்திரகலா கார்த்திக் யாருமே அவர் பேச்சை கேட்கவில்லை. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author