Tamizhum Saraswathiyum Today Episode | 16.05.2022 | Vijaytv
tamizhum Saraswathiyum. 16.05.2022
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி சமைத்த சாப்பாட்டை வீட்டில் அனைவரும் ருசித்து சாப்பிட்டார்கள். கோதையும் அதை சாப்பிட்டு பாராட்டினார். மேலும் நடேசன் இனி தமிழ் சரஸ்வதி இருவரும் நம்மோடு உக்கார்ந்து சாப்பிடலாமே என்று கேட்டார். ஆனால் கோதை அதற்கு மறுத்துவிட்டார். சந்திரகலா மற்றும் கார்த்திக் இருவரும் அபியை எப்படியாவது கண்டு பிடித்து கோதை முன் நிறுத்த வேண்டும் என்று முடிவு எடுத்தார்கள். அவர்கள் பேசிக்கொண்டு இருக்கும்போது அந்த வழியாக சென்ற ஆட்டோவில் அபி சென்றார். அதை பார்த்த கார்த்திக் மற்றும் சந்திரகலா இருவரும் உடனே அவரை பிடிக்க நினைத்தார்கள். கார்த்திக் அந்த ஆட்டோவை பின் தொடர்ந்து வந்து நிறுத்தினார். மேலும் அபியை வேக வேக மாக தன் வீட்டுக்கு அழைத்து வந்து கோதை முன் நிறுத்தினார். மின்னல் வீட்டுக்கு அருகில் நின்றபோது ஆட்டோவில் சென்றவரை நான் தான் கண்டு பிடித்து கூட்டி வந்ததாக கூறினார். ஆனால் கோதை ஒன்றும் புரியாமல் நின்றார். அனிதான் காலையிலே வீட்டுக்கு கிளம்பிவிட்டேன் என்று எனக்கு அழைத்து சொல்லிவிட்டாள் பின் எதற்கு இப்படி செய்கிறாய் கார்த்திக் என்று கேட்டார் கோதை. அபி அதை தான் ரொம்ப நேரமாக சொல்ல முயற்சி செய்தார். ஆனால் கார்த்திக் அவரை பேச விடாமல் செய்தார். சந்திரகலா மற்றும் கார்த்திக் இப்படி செய்வார்கள் என்று முன் கூட்டியே வியூகித்து அபியை வீட்டுக்கே வரவைத்து இருந்தார் சரஸ்வதி. நடேசன் இன்னமும் பழசை நினைத்து கோவத்தில் எதையாவது செய்யாமல் உன்னை மாற்றிக்கொள் என்று கார்த்திக்கு அறிவுரை கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…