தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, மதுவை பார்த்து சந்திரகலா பேசினார். மது தான் செய்த சூழ்ச்சியை பற்றி கலந்து கொண்டார். அதை தமிழும் நம்பி விட்டதாக கூறினார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்த நினைத்தார் சந்திரகலா. இதனால் உடனே அவர் செய்தது தான் சரி என்றும், இதை வைத்தே அந்த தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரையும் பிரித்துவிட வேண்டும் என்று கூறினார். மேலும் மதுவை சரஸ்வதிக்கு எதிராக தூண்டி விட்டார். அவரும் அதற்கு ஏற்பது போலவே இருந்தார். அடுத்து வசுந்தராவை பார்க்க சந்திரகலா மற்றும் கீதா இருவரும் கோதை வீட்டுக்கு கிளம்பினார்கள். அங்கு சென்றதும் வசுந்தராவை நலம் விசாரித்தார்கள். பின் வசுவை தன் கூடவே வைத்து பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார். இங்கு மாடியில் இருப்பதால் அடிக்கடி மாடிப்படி எற வேண்டியது இருக்கும். அதனால் என் வீட்டில் வசுந்தரா இருக்கட்டும் என்று கூறினார். அதை கேட்டதும் கார்த்திக் கோவப்பட்டார். இங்கும் வாளுக்கு தேவையான எல்லாமே வசதியோடு தான் செய்து கொடுக்கிறோம் என்று கூறினார். ஆனால் சந்திரகலா தன் மகளை தன் கூடவே வைத்து பார்க்க வேண்டும் என்று நினைப்பதாக கூறினார். ஆனால் கோதை இதெல்லாம் பழக்கத்திலே இல்லை, புதுசு புதுசாக எதையாவது சொல்வதாக நினைத்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…