தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சொக்கலிங்கம் வீட்டில் சந்திரகலா தனது பேச்சால் இந்த திருமணத்தை நடத்தவிடாமல் இருக்க எல்லா வேலைகளும் செய்தார். சரஸ்வதி என்ன படித்தார், எந்த கல்லூரி, எவளோ பெர்செண்டேஜ் என வரிசையாக கேள்விகள் கேட்டார். சொக்கலிங்கம் பேச முடியாமல் தடுமாறினார். பின் பொண்ணுக்கு எவ்ளோ நகை செய்வீர்கள் என்று சந்திரகலா ஆரம்பித்தார். கோதை அதெல்லாம் எதுவும் வேண்டாம், சரஸ்வதி மருமகளாக வந்தால் மட்டும் போதும் என்றார். ஆனால் சந்திரகலா மீண்டும் ஆரம்பித்தார். என் பொண்ணுக்கு 100 சவரன் நகை, வைர நகைகள், கார் செய்தேன், அப்போ நீங்க என்ன செய்வீங்க என்று கேட்டார். சொக்கலிங்கம் எரிச்சல் அடைந்தார். உங்க அளவுக்கு இல்லைனாலும் பாதியாவது செய்வேன் என்று வாக்கு கொடுத்தார். அடுத்து என்ன நடந்தது ? காணொளியை பார்க்க…..