Tamizhum Saraswathiyum Today Episode | 18.05.2022 | Vijaytv
tamizhum Saraswathiyum. 18.05.2022
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் சரஸ்வதியின் மன நிம்மதிக்காக அவர் வைத்த குங்குமம் அழியாமல் வேலை செய்தார். நமச்சி அதை பார்த்து என்ன விஷயம் என்று கேட்டார். அதற்கு தமிழ், இது வரை திட்டம் போட்டு வீட்டு சமையல் அறைக்குள் சென்று சமையலும் செய்தாலும், எப்போதும் இதை அம்மா எத்துகொள்ள வேண்டும் என்று வேண்டி இருக்கிறாள் சரஸ்வதி என்று கூறினார் தமிழ். இதை கேட்ட நமச்சி, அதை நானும் பாட்டியும் பார்த்துக்கொள்கிறோம். இதே போல் வேறு திட்டம் எதாவது செய்து அதையும் நடத்திவிடலாம் என்று கூறினார். அதை அந்த வழியாக வந்த கார்த்திக் கேட்டுவிட்டார் . என்ன திட்டம்? அடுத்து யாரை ஏமாற்ற போகிறீர்கள் என்று கேட்டார். நமச்சி அதற்கு எதாவது பொய் சொல்லி சமாளிக்க நினைத்தார். ஆனால் தமிழ் அவரை தடுத்து உண்மையை சொன்னார். நீ உன் மாமியார் பேச்சை கேட்டு வீட்டையும் குடும்பத்தையும் பிரிக்க நினைக்கும்போது, ஒரு பொய் சொல்லி குடும்பத்தை சேர்க்க வேண்டும் என்று முயற்சி செய்வதில் தவறு இல்லை என்றார் தமிழ். அதற்கு கார்த்திக் உன் திட்டம், பொய், பித்தலாட்டம் அனைத்தையும் நானே அம்மாவுக்கு நிரூபிப்பேன் என்று கூறினார். உடனே கார்த்திக் சந்திரகலாவை பார்த்து பேசினார். தமிழே இதன் உண்மையை ஒத்துக்கொண்டதாக கூறினார். இதனால் சந்திரகலா தன் பங்குக்கு மேலும் தமிழ் மீது உள்ள வெறுப்பை அதிகரித்தார். மேலும் கம்பேனியில் ஒரு முக்கியமான முடிவை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். கம்பேனியில் 200 பேர் வேலை செய்வதை 2000 ஆக்க நான் பணம் ஏற்பாடு செய்து தருகிறேன், அதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு கூறினார் சந்திரகலா. பின் கார்த்திக் அதை உடனே தன் அம்மா அப்பாவிடம் அழைத்து முடிவு எடுக்க வேண்டும் என்று நினைத்தார். அதற்கு கோதை என்ன பதில் சொன்னார்? அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…