தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் தனக்கு வந்த வேலையை கோதை கம்பேனிக்கு அனுப்பி வைத்த விஷயம் நடேசணுக்கு தெரிய வந்தது. தெரிந்ததும் மகிழ்ச்சி அடைந்தார். தன் மகன் ஒரு நல்ல தலைவனாகவும் இருந்து இருக்கிறான், அதே நேரம் நல்ல மகனாகவும் இருக்கிறான் என்று பெருமைப்பட்டார். உடனே வீட்டுக்கு சென்று அதையும் அனைவர் முன்னிலையிலும் கூறினார். அர்ஜுன் தமிழுக்கு எதிராகவே பேசினார். ஆனால் நடேசன் தமிழின் நல்ல குணத்தை எடுத்து கூறினார். கோதையிடம் தனியாக பேசவும் செய்தார். இத்தனை விஷயங்களில் நேர்மையாக இருக்கும் தமிழ் எப்படி தன் தங்கையின் கணவரை கொலை செய்வான்? அதை அவன் கண்டிப்பாக செய்து இருக்க மாட்டான். இந்த தேவை இல்லாத கிரிமினல் வேலைகளை நம் மாப்பிள்ளை தான் செய்கிறார் என்று கூறினார். இதனால் கோதை அர்ஜுன் மீது மேலும் சந்தேகம் கொண்டார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….