Tamizhum Saraswathiyum Today Episode | 19.01.2022 | Vijaytv
tamizhum Saraswathiyum.19.01.2022
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கம்பேனியில் தீ பிடித்ததால் குடும்பத்தில் அனைவரும் பதட்டமாக இருந்தார்கள். ஆனால் ஜாதகர் இந்த விபதுக்கும் இந்த திருமணத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறினார். அதனால் தாலிக்கு பொன் உருக்கும் விசேஷம் நல்லபடியாக நடந்தது முடிந்தது. இதை பார்த்துக்கொண்டு இருந்த சந்திரகலாவுக்கு எரிச்சலாக இருந்தது. கீதாவும் அவரிடம் மேலும் பேசி அவரின் கோபத்தை தூண்டினார். இவளோ பெரிய விஷயம் நடந்தும் கோதை ஒரு ஜாதகரை வர வைத்து பார்த்து நம் மொத்த திட்டத்தையும் கெடுத்துவிட்டாரே என்று புலம்பினார். சந்திரகலா அவர் பேச்சை கேட்டு மிகவும் கோபம் கொண்டார். பின் இரு வீட்டாரும் விசேஷம் முடிந்து வீடு திரும்பினார்கள். வீட்டுக்கு வந்ததும் தமிழ் சரஸ்வதி இருவரும் ஃபோனில் பேசிக்கொண்டு இருந்தார்கள். சரஸ்வதி நடந்த விபத்தை நினைத்து வருந்தினார். தன்னால் தான் இந்த அசம்பாவிதம் நடந்ததோ என்று கூறினார். ஆனால் தமிழ் அவரை சமாதானம் செய்தார். எல்லாம் நல்லதாகவே நடக்கும் எதையும் மனதில் போட்டு குழம்பிக்கொள்ள வேண்டாம் என்றார்.சற்று நேரத்தில் கோதை சிக்கலிங்கதிர்க்கு அழைத்து பேசினார்.சரஸ்வதிக்கு திருமண பட்டு எடுக்க வேண்டும் அதற்கு நல்ல நாள் பார்த்து போய்ட்டு வந்துவிடலாம் என்றார். சொக்கலிங்கமும் சரி என்றார். உடனே சந்திரகலாவுக்கு அழைத்து இந்த விஷயத்தை கூறினார் கோதை. அதற்கு அவர் என்ன பதில் சொன்னார்? காணொளியை பார்க்க…