Tamizhum Saraswathiyum Today Episode | 21.07.2022 | Vijaytv
tamizhum Saraswathiyum. 21.07.2022
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கார்த்திக் தான் ஆடி பரிசு வாங்கியதை பெருமையாக பேசினார். ஆடி பல வருடங்கள் ஆகியும் என்னால் ஆடி பரிசு வாங்க முடியும். அதே போல் எனக்குள் இருக்கும் திறமையை வெளிபடுத்த ஒரு வாய்ப்பு கிடைத்தால் என் துறையிலும் சிறந்து விளங்குவேன் என்று கூறினார். இது கேட்ட வசுந்தரா மேலும் அவரை ஊக்க படுத்தினார். உனக்குள் நிறைய திறமை இருக்கிறது அதற்கான சந்தர்ப்பம் வரும் போது நிரூபிக்க வேண்டும் என்று கூறினார். மேலும் இந்த பரிசு வனக முக்கிய காரணமே வசுந்தரா தன்னை வற்புறுத்தி கூப்பிட்டதால் தான் என்றும் கூறினார். பின் வெளியே போய் சாப்பிடலாம் என்று கிளம்பினார்கள். அதே நேரம் தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் நடந்தது முடிந்த நடன போட்டியை பற்றி பேசிக்கொண்டு இருந்தார்கள். தமிழ் தன் தம்பிக்காக விட்டுக்கொடுத்ததை சரஸ்வதி கூறினார். ஆனால் தமிழ் அதை முதலில் மறுத்தாலும் பின் ஒத்துக்கொண்டார். தன் தம்பி வெற்றி பெறுவதை பார்த்து சந்தோசம் கொண்டார். நான் வெற்றி பெறுவதை விட தன் தம்பி வெற்றி பெருவதையே பெருமையாக நினைத்தார். மேலும் அவர் விட்டு கொடுக்காவிட்டாலும் கார்த்திக் வெற்றி பெற்று இருப்பான் என்று உறுதியாக கூறினார். இவர்கள் பேசுவதை கார்த்திக் மற்றும் வசுந்தரா இருவரும் கேட்டார்கள். பின் நால்வரும் சாப்பிட கிளம்பினார்கள். பின் சாப்பிட்ட கையோடு வெளியே கிளம்பவும் தயார் ஆனார்கள். அப்போது கார்த்திக் மற்றும் வசுந்தரா இருவரும் தனியாக வெளியே சுற்றி வரட்டும் என்று தமிழ் மற்றும் சரஸ்வதி விரும்பினார்கள். ஆனால் வசுந்தரா நால்வரும் சேர்ந்தே செல்லலாம் என்று கூறினார். தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் தயங்கினார்கள். இதனால் கார்த்திக் நாமும் வெளியே செல்ல வேண்டாமா என்று கூறினார். இதனால் வேறு வலி இல்லாமல் அவர்களும் கிளம்பினார்கள். போன இடத்தில் சரஸ்வதி மற்றும் வசுந்தரா இருவரும் ஐஸ் கிரீம் சாப்பிட ஆசை பட்டார்கள். ஆனால் தமிழ் அதை தடுத்தார். ஆனால் இதை கவனித்த கார்த்திக் இருவருக்கும் ஐஸ் கிரீம் தமிழுக்கு தெரியாமல் வாங்கி கொடுத்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…
About Author
Auto Amazon Links: No products found.