Tamizhum Saraswathiyum Today Episode | 22.12.2021 | Vijaytv
tamizhum Saraswathiyum.22.12.2021
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழுக்கு அழைத்து பேசினார் சரஸ்வதி. கோதையிடம் எந்த உண்மையும் சொல்ல வேண்டாம், தனியாக பேச வேண்டும் என்று கூறினார் சரஸ்வதி. உடனே சரஸ்வதி மின்னல் தமிழ் நமச்சி அனைவரும் சந்தித்தார்கள். பின் சரஸ்வதி தான் பார்த்த அனைத்தையும் கூறினார். சந்திரகலா மற்றும் கீதா இருவரும் சேர்ந்து செய்யும் திட்டம் அனைத்தையும் கூறினார். இந்த வீட்டை, இந்த குடும்ப்த்தை மொத்தமாக பிரிக்க வேண்டும் என்பதே அவரின் எண்ணம் என்று கூறினார்.ஆனால் இதுக்கும் வசுந்தராவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, அவரையும் தன் பக்கம் இழுக்கவும் திட்டம் தீடியதாக கூறினார். தமிழ் அதை கேட்டதும் அதிர்ந்து போனார்.மண்டபத்தில் சந்திர கலா செய்த விஷயத்தை கூற முயன்றார் சரஸ்வதி, பின் அதை சொல்லாமல் மறைத்தார். சொக்கலிங்கம் வீட்டில் அமர்ந்து தனது வேலையை பார்த்தார், ஆனால் அவரால் எந்த வேலையும் தீர்க்கமாக செய்ய முடியவில்லை. வாசுகி அதற்கு சமாதானம் செய்தார்.பின் அவர் ஒரு யோசனை செய்தார், அது என்ன யோசனை? அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…