தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் இன்று முதல் முறையாக ஒரு முதலாளி போல் வேலைக்கு சென்று வந்ததில் சரஸ்வதி துள்ளி குதித்து வேலைகளை செய்தார். தன் கணவரை இப்படி தான் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டதாக கூறினார். இரவு வேலை முடித்து வீடு திரும்பிய தமிழை பார்த்து அனைவருமே எப்படி இருந்தது இந்த அனுபவம் என்று கேட்டார்கள். தொழிலாளர்கள் முதல் அனைவருமே இதற்கு துணையாக இருந்தார்கள் என்று கூறினார் தமிழ். தமிழ் இன்று வேலைகளை கற்றுக்கொண்டது, அவரது வேலையை செய்த வீதம் என்று கார்த்திக் தமிழை புகழ்ந்து தள்ளினார். இதை கேட்ட கோதை ஆனந்த கண்ணீர் விட்டார். தன் பிள்ளைகள் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காமல் இப்படி ஒற்றுமையாக இருப்பதை பார்த்து கண்ணீர் வருகிறது என்று கூறினார். இதை கேட்ட அர்ஜுன் அம்மா கோவதில் கொந்தளித்தார். உடனே அர்ஜுன் இடம் இந்த கோதை தன் கண் முன் இப்படி சந்தோசமாக இருப்பதை பார்க்கவே வெறுப்பாக இருக்கிறது என்று கூறினார். அதற்கு அர்ஜுன் என்ன கூறினார்? அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…