Tamizhum Saraswathiyum Today Episode | 26.12.2022 | Vijaytv
tamizhum Saraswathiyum. 26.12.2022
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, காலையில் அனைவரும் எழுந்து வந்ததும் அருகம்புல் சாறு குடிக்க தயார் ஆனார்கள். அப்போது சரஸ்வதி அர்ஜுன் அம்மா, அக்கா மாமா அவர்களுக்கு மட்டும் டீ காபி என்று அவர்கள் விருப்பப்படி செய்து கொடுத்தார் சரஸ்வதி. ஆனால் அதையே குறை சொல்ல ஆரம்பித்தார்கள். இதில் சக்கரி கம்மியாக இருக்கிறது, இதில் தோல் கம்மியாக இருக்கிறது என்று நக்கலாக பேசினார்கள். இதனால் கோதைக்கு கோவம் வந்தது. இருந்தும் அமைதியாக இருந்தார். பின் ராகினியிடம் நீயும் படிப்பு முடிந்ததும் எப்படி இந்த இலை தழை மருந்து தான் சாப்பிடுவாரா என்று கேலி செய்தார்கள். அதற்கு மேல் பொறுக்க முடியாத கோதை கத்த ஆரம்பித்தார். இது எங்கள் வீட்டுக் கட்டுப்பாடு. இதையே கேலி கிண்டல் செய்தால் அதை பார்த்து விட்டு அமைதியாக இருக்க முடியாது என்று கூறினார். மேலும் விருந்தாளியாக கொஞ்ச நாள் இருப்பதால் தான் உங்களுக்கு பிடித்ததையும் செய்து தர சம்மதித்தேன். இனி அப்படி எதிர்பார்க்க வேண்டாம். இந்த வீட்டுக்காக இந்த கட்டுப்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்றால் கண்டிப்பாக இந்த வீட்டில் கஷ்டப்பட்டு இருக்கத் தேவை இல்லை என்று கூறினார் கோதை. உடனே ராகினி குடும்பத்துக்கு ஏற்ப ஒரு வீட்டை பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….
About Author
Auto Amazon Links: No products found.