தமிழும் சரஸ்வதியும் தொடரில், சரஸ்வதி பூஜை சாமான்களை வசுந்தராவிடம் வாங்கி வர சொன்னேன் ஆனால் வாங்கவில்லை என்றார். ஆனால் வசுந்தரா தன்னிடம் அப்படி எதுவும் அவர் கூறவில்லை. எதற்காக பழி போட வேண்டும் என்று கேட்டார். இதை பார்த்த கோதை மீண்டும் சரஸ்வதி மீது கோவம் கொண்டார். மேலும் மேலும் சரஸ்வதி தான் பொய் சொல்வதாக நினைத்தார். இதனால் கோதை கோவத்தில் சரஸ்வதியை கண்டபடி திட்டினார். பொய் சத்தியம் எதுவும் செய்ய வேண்டாம், அடுத்து பழியை நீ அந்த கடவுள் மேல் கூட போட தயங்க மாட்டாய் என்று கூறினார். ஆனால் சரஸ்வதி சொல்லும் எதிட்டும் நிலையில் கோதையும் இல்லை, நடேசனும் இல்லை. இந்த நிலையில் சரஸ்வதி இனி படிக்க வேண்டாம் என்று கூறினார். இதனால் வீட்டில் பெரிய பிரச்சனை வரும் என்றால் அப்படி பட்ட படிப்பு தேவை இல்லை என்று கூறினார். வசுந்தராவிடம் தனியாக சரஸ்வதி பேசினார். எப்படி இது போல் நீ செய்தாய் என்று தன் ஆதங்கத்தை கொட்டினார். ஆனால் வசுந்தராவுக்கு ஒன்றும் புரியாமல் இருந்தது. அடுத்த வேலையாக கார்த்திக் மீண்டும் தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் நல்லவர்கள் இல்லை என்று கூறினார். மேலும் அவர்களுக்காக நீ கவலை பட வேண்டாம் என்று கூறினார். சந்திரகலாவுக்கு இந்த தகவல் வந்து செந்தது. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…