Tamizhum Saraswathiyum Today Episode | 27.12.2022 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கோதை பேசியதை பார்த்து அர்ஜுன் குடும்பமே அதிர்ச்சியில் இருந்தது. என்ன நடந்தது என்று அர்ஜுன் அக்கா மாமா அனைவரும் சொல்லி புலம்பினார்கள். அதையும் அர்ஜுன் இனி இவர்களிடம் அடங்கியே நடந்ததுகொள்ளுங்கள் என்று கூறினார். இருந்தும் அர்ஜுன் அவரது திட்டத்தை ஆரம்பித்தார். அடுத்த நாளே வேறு ஒரு கம்பேனியை வாங்கும் விஷயத்தை பற்றி தமிழ் மற்றும் கார்த்திக் இடம் பேசினார். இந்த நிலையில் கம்பேனியில் இருக்கும் கடனுக்கு நடுவில் இந்த முதலீடும் நமக்கு பெரிய அளவில் நஷ்டத்தை உருவாக்கும் என்று கூறினார் தமிழ். ஆனல் கார்த்திக் அதெல்லாம் சரியாக வரும், அதுவும் நல்ல கம்பேனி தான் என்று கார்த்திக் நம்ப ஆரம்பித்தார். இப்போதும் அந்த கம்பேனியை வாங்கினால் கண்டிப்பாக 13 கோடி தேவைப்படும் என்பது தெரிந்து கண்டிப்பாக இது சரியாக வராது என்று கூறினார் தமிழ். ஆனல் கார்த்திக் இதை மேலும் விசாரித்து பின் அம்மாவிடம் பேசலாம் என்று கூறினார். இதை பயன்படுத்தி அர்ஜுன் மேலும் கார்த்திக் மனதில் தமிழுக்கு எதிராக பேச ஆரம்பித்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

About Author