Tamizhum Saraswathiyum Today Episode | 28.10.2022 | Vijaytv
tamizhum Saraswathiyum. 28.10.2022
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, ராகினி தன் பரிட்சையை முடித்து விட்டு வெளியே வந்தார். அந்த நேரம் அர்ஜுன் ராகினிக்கு அழைத்து பேசினார். கம்பேனியில் நடந்த பிரச்சனை முடிந்ததா என்று விசாரித்தார் ராகினி. அர்ஜுன் அங்கு நடந்ததை கூறினார். ஆதி தான் முழுக்க முழுக்க இதற்கு உதவி செய்தார் என்று எந்த யோசனையும் இல்லாமல் கூறினார். ராகினி குழப்பம் அடைந்தார். ஆதியா இதை செய்தது என்று ஆச்சர்யப்பட்டார். ஆனால் அர்ஜுன் ஆதி மேல் மதிப்பு வந்து விடுமோ என்ற பயம் இல்லாமல் ஆதியை நல்ல விதமாகவே பேசினார். இதனால் மேலும் அர்ஜுன் மேல் நல்ல அபிப்ராயம் வந்தது ராகினிக்கு. பின் அர்ஜுனுக்கு தான் தன் வாழ்க்கையில் இருக்கும் தகுதி இருப்பதாக நினைத்தார். ஆனால் அதை வெளிப்படையாக எதையும் யாரிடமும் சொல்லவில்லை. அதே நேரம் சந்திரகலா மற்றும் ஆதி இருவரும் கோதை வீட்டுக்கு வந்தார்கள். நல்ல விஷயம் பேச தான் வந்தேன் என்றும் கூறினார். பேசியதை வைத்தே வசுந்தரா என்ன பேச போகிறார் என்று கனித்தார். ஆனால் சரஸ்வதிக்கு இதில் எதோ சரி இல்லாதது போல் இருந்தது. நல்ல விஷயம் பேச வேண்டும் என்று சரஸ்வதியை இனிப்பு செய்து கொடுக்க சொன்னார் சந்திரகலா. மேலும் இனிப்பு சாப்பிட்ட பின் ஆதி ராகினி திருமணம் பற்றி பேச ஆரம்பித்தார். மேலும் கொஞ்ச நாள் முன் தான் ராகினி ஆதியிடம் தன் காதலை வெளிப்படுத்தினார் என்றும் கூறினார். இதை கேட்டதும் வீட்டில் அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள். இதனால் ராகினியும் ஆதியை விரும்புகிறாரோ என்று கோதை நினைக்க ஆரம்பித்தார். ஆனால் அதற்கு யோசித்து கோதையும் சம்மதம் தெரிவித்தார். ஆனால் அதை தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் ராகினியிடம் பேசி பின் முடிவு எடுக்கலாம் என்று கூறினார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…