Tamizhum Saraswathiyum Today Episode | 29.07.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum.29.07.2022

tamizhum Saraswathiyum.29.07.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ், சரஸ்வதி, கார்த்திக் மற்றும் வசுந்தரா நால்வரும் காட்டுக்குள் சுற்றி பார்த்தார்கள். அப்போது மீண்டும் அந்த ரவுடிகள் போகும் வழியில் வம்பு இழுத்தார்கள். போதும் தமிழ் கார்த்திக்கை பொறுமையாக இருக்கும்படி கூறி அழைத்து வந்தார். பின் போலீஸை பார்த்ததும் அவர்கள் ஓடி விட்டார்கள். பின் மீண்டும் சுற்றி பார்க்க கிளம்பினார்கள். அப்போது ஒரு இடத்தில் தமிழ் வலி கேட்டு வருவதாக இறங்கி சென்றார். அந்த நேரம் மீண்டும் அந்த ரவுடிகள் வந்து பிரச்சனை செய்தார்கள். அப்போது கார்த்திக் அவர்களுடன் சண்டைக்கு ஏறினார். உடனே கார்த்திக்கை காட்டுக்குள் இழுத்து அடிக்க ஆரம்பித்தார்கள். கார்த்திக் வசுந்தரா மற்றும் சரஸ்வதி மூவரும் அவர்களை சமாய்க்க முயற்சி செய்தார்கள். ஆனால் சமாளிக்க முடியவில்லை. ஆளுக்கு ஒரு பக்கமாக அடி வாங்கினார்கள். கார்த்திக்கை பிட்டிலால் குத்த வந்த ஒருவனை சரஸ்வதி கட்டையால் அடித்து கார்த்திக்கை காப்பாத்தினார். அந்த நேரம் தமிழ் அங்கு வந்து ரவுடிகளை அடுத்து அனைவரையும் காப்பாற்றினார். அந்த நேரம் போலீசும் அங்கு வந்தது. அந்த ரவுடிகளை கைது செய்தார்கள். பின் சுற்றி பார்த்துவிட்டு அறைக்கு திரும்பினார்கள். அப்போது கார்த்திக் சரஸ்வதியை பார்த்து நன்றி கூறினார். ஒரு நொடியில் என் உயிர் போயிருக்கும் ஆனால் சரஸ்வதி தான் தன்னை காப்பாற்றினார் என்று கூறினார். தன் அண்ணன் அண்ணிக்கு நன்றியும் மன்னிப்பும் கேட்டுகொண்டார். ஆனால் சரஸ்வதி மற்றும் தமிழ் பேசினதை கேட்டு அவர்களை பற்றி அறிந்து கொண்டார் கார்த்திக். பின் அன்று இரவு கார்த்திக் வசுந்தரா இருவரும் அவர்களது வாழ்க்கையை ஆரம்பிக்க மோதிரத்தை பொட்டுகொண்டார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author