தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, அர்ஜுன் தனக்கு அந்த புது கம்பேனி வரக்கூடாது என்று நினைத்தார். அதற்காக சீட்டு எழுதியதில் ஒன்று கிழிந்த பேப்பரில் தனக்கு தேவையானதை எழுதினார். அர்ஜுன் திட்டம் போட்ட படி தமிழுக்கு புதிதாக ஆரம்பித்த கம்பேனியை எடுக்கவும் வைத்தார். கோதை, இந்த ஆண்டு விழாவுக்குள் ஒவ்வொருவரும் 5 கோடிக்கு வியாபாரம் செய்ய வேண்டும் என்று கூறினார். இது புதிதாக வாங்கிய கம்பேனியில் சாதாரணமாக இவ்வளவு வியாபாரம் செய்ய முடியுமா என்று அனைவருக்கும் வியப்பு. நடேசன் இந்த பதவிக்கு நேரடியாக தமிழை போடலாமே. அவன் இந்த கம்பேனிக்காக சின்ன வயதில் இருந்தே கடினமாக உழைத்தவன் என்று கூறினார். ஆனால் கோதை அதற்காக மற்றவர்கள் திறமையை குறைத்து எடை போட முடியாது என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…