பெண் இல்லையேல் இந்த உலகில் ஒரு துகளும் உருவாவதில்லை, கடவுளுக்கு நிகரான அந்த படைப்புவாதிகளை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
மார்ச் 8 இந்த நாளை ஒவ்வொரு வருடமும் சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடி வருகிறோம். இந்த பேருலகின் சக்திகளாக, தாயாக, மகளாக, காதலியாக, உந்துதல்களாக என்று பல உருவில் நமக்கு பக்கபலமாக இருந்து கொண்டு இருக்கும் ஒவ்வொரு மகளிருக்கும் இடம்பொருள் சார்பாக மகளிர் தின வாழ்த்துக்கள்.
“ நம் ஒவ்வொரு அசைவிற்கும் அவள் தேவைப்படுகிறாள், கூண்டுக் கிளிகளாய் அவர்களை ரசிக்காமல், பறந்து திரியும் வண்ணத்து பூச்சிகளாக அவர்களை பார்த்து ரசித்திடுவோம் “