குறைந்தபட்ச இருப்புத்தொகை இல்லை எனில் இனி ரூ 600 பிடித்தம் செய்யப்படும் – PN BANK

Punjab National Bank New Rules Are Amended

குறைந்தபட்ச இருப்புத்தொகை அக்கவுண்ட்டில் இல்லையெனில் இனி ரூ 600 பிடித்தம் செய்யப்படும் என்று பஞ்சாப் நேசனல் வங்கி அறிவித்து இருக்கிறது. மெட்ரோ நகரங்களில் காலாண்டு இருப்புத் தொகையை 5000-லிருந்து 10,000-மாக மாற்றி இருப்பது மட்டுமில்லாமல், அக்கவுண்ட்டில் மினிமம் பேல்ன்ஸ் தொகை இல்லையெனில் காலாண்டுக்கு ரூபாய் 600 பிடித்தம் செய்யப்படும் என்று அறிவித்து இருக்கிறது. இதற்கு முன்னர் பிடித்தம் ரூபாய் 300-ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. “ கையில் இருக்கும் காசை வங்கியில் வைத்தால் பாதுகாப்பாக இருக்கும் என்று நம்பி … Read more

சந்தானம் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ டீசர் வெளியானது!

Santhanam In And As Agent Kannayiram Teaser Is Out

சந்தானம் அவர்களின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. லாபிரிந்த் பிலிம்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் மனோஜ் பீஃதா அவர்களின் இயக்கத்தில், சந்தானம், ரியா சுமன், ஸ்ருதி ஹரிகரன், புகழ், முனீஸ்காந்த், ரெட் கிங்ஸ்லி மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. “ வருடத்திற்கு இரண்டு மூன்று படங்களை வெளியிட்டு முன்னனி நடிகர்களுக்கு நிகராக சந்தானமும் திரையுலகில் கலக்குகிறார் “

ODI Series | IND vs SA | ‘ஒரு நாள் போட்டி தொடரையும் இழந்தது இந்திய அணி’

ODI Series Match 2 India Vs South Africa India Lost The Match And The Series

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் இந்திய அணி தோல்வி அடைந்ததை தொடர்ந்து, ஒரு நாள் போட்டி தொடரையும் இழந்திருக்கிறது இந்திய அணி. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 71 பந்துகளில் அதிரடியாக 85 ரன்கள் எடுத்தார். அதற்கு பின் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 48.1 ஓவர்களிலேயே எளிதாக இலக்கை அடைந்து … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 3.37 லட்சமாக ஆனது’

Corona Updates In India 22 01 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 3.37 லட்சம் கொரோனா தொற்று பதிவாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்து இருக்கிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,37,704 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் தேசத்தில் தொற்றுக்கு 488 பேர் பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு ஒத்த கொரோனா பலி எண்ணிக்கையானது இந்தியாவில் 4,88,884 ஆக உயர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. “ சிகிச்சை … Read more

50 வருட காலமாக எரிந்து வந்த அமர் ஜவான் ஜோதி அணைந்தது!

Amar Jawan Jyoti Merged With National War Memorial Flame

பாகிஸ்தானுடனான போரில் மரித்த வீரர்களின் நினைவாக 50 வருட காலமாக எரிந்து வந்த அமர்ஜவான் ஜோதி ஒன்றிய அரசால் அணைக்கப்பட்டது. 1972-இல் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போரில் மரித்த இந்திய ராணுவ வீரர்களின் நினைவாக, 50 வருட காலமாக எரிந்து வந்த அமர்ஜவான் ஜோதியை அணைத்து, இந்தியா தேசிய வார் மெமோரியல் ஜோதியுடன் இணைத்து இருக்கிறது ஒன்றிய அரசு. இதற்கு பலதரப்பட்ட மக்களும் சமூக வலை தளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். “ 50 வருட கால ஜோதியை … Read more

’ஒரு மாவட்டத்திற்கு ஒரு விமான நிலையம்’ – ஆந்திர முதல்வரின் அதிரடி திட்டம்

Andhra CM Jagan Mohan Reddy Plan To Launch One District One Airport Scheme

ஒரு மாவட்டத்திற்கு ஒரு விமான நிலையம் என்ற அதிரடி திட்டத்தை ஆந்திராவில் அமல்படுத்தி இருக்கிறார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி. அந்தந்த மாவட்டத்தில் இருக்கும் மக்கள், அந்தந்த மாவட்டத்திலேயே விமான பயணம் மேற்கொள்ளும் வகையில், மாவட்டத்திற்கு ஒரு விமான நிலையம் என்ற திட்டத்தை ஆந்திராவில் அறிமுகப்படுத்தி இருக்கிறார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி. தற்போது ஆந்திராவில் 6 விமான நிலையங்கள் செயல்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது. “ தனது அதிரடி திட்டத்தின் மூலம் மக்களை வெகுவாக … Read more

மம்மூட்டியை அடுத்து துல்கர் சல்மானுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு இருக்கிறது!

After Mammooty Dulquer Salmaan Tested Corona Positive

அப்பா மம்மூட்டியை அடுத்து மகன் துல்கர் சல்மானுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. நடிகர் மம்மூட்டியை அடுத்து அவரது மகன் துல்கர் சல்மானுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் அவரது வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பதாகவும், அவருடன் சூட்டில் இருந்தவர்களையும் பாதுகாப்பாக இருக்க சொல்லியும் அறிவுறுத்தி இருக்கிறார். “ கொரோனா டெல்டாவாக மாறி சமூகப்பரவலாகி தற்போது ஒமிக்ரானாக பட்டி தொட்டி எங்கும் பரவிக் கிடப்பதாக மருத்துவ வல்லுநர்கள் … Read more

அனைத்து கல்லூரி தேர்வுகளும் ஆன்லைனில் நடத்தப்படும் – அமைச்சர் பொன்முடி

TamilNadu College Semester Exam Will Conducted As Online Exam Minister Ponmudi

கொரோனா சூழலைக் கருத்தில் கொண்டு அனைத்து கல்லூரி தேர்வுகளும் ஆன்லைனில் நடத்தப்படும் என்று அமைச்சர் பொன்முடி அறிவித்து இருக்கிறார். பெருகிவரும் கொரோனா சூழலைக் கருத்தில் கொண்டு அரசு மற்றும் தனியார் கல்லூரி செம்ஸ்டர் தேர்வுகள் அனைத்தும் ஆன்லைனிலேயே நடத்தப்படும் என்று கூறி இருக்கிறார் அமைச்சர் பொன்முடி. இறுதி ஆண்டுமாணவர்களின் இறுதி தேர்வுகள் மட்டும் நேரடி தேர்வாக நடத்தவும் உத்தரவிட்டு இருக்கிறார். “ இரண்டு வருடங்களாகவே பள்ளி, கல்லூரி தேர்வுகள் அனைத்தும் ஆன்லைனிலேயே நடத்தப்பட்டு வருகிறது. இதனால் மாணவர்கள் … Read more

IND vs SA | ODI Series | Match 2 | ‘தன் தோல்விக்கு பதிலடி கொடுக்குமா இந்திய அணி’

India vs South Africa ODI Series Match 2 Starts Today

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி இன்று நடைபெற இருக்கிறது. முதல் போட்டியில் இந்தியா தோல்வியடைந்த நிலையில், இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி இன்று போலந்து பார்க் மைதானத்தில் வைத்து நடைபெற இருக்கிறது. இந்த போட்டி நேரலையில் மாலை 2 மணி அளவில் டிஸ்னி ஹாட் ஸ்டார் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் ஒளிபரப்பாகும். South Africa Probable XI: Quinton de Kock, Janneman … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 3.5 லட்சத்தை நெருங்கியது’

Corona Updates In India 21 01 2022

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 3.5 லட்சத்தை நெருங்கி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்து இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 3,47,254 புதிய தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் தேசத்தில் 703 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது தேசத்தில் 4,88,396 ஆக உயர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. “ தேசத்தில் ஒட்டு மொத்தமாக கொரோனாவுக்கு … Read more